ஒட்டாவா நகரில் கோவிட் தாக்கம் காரணமாக நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

ஒட்டாவா மக்கள் மத்தியில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டாவாவின் மருத்துவ அதிகாரி மருத்துவர் வீரா எட்சஸ்இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தக் காலப் பகுதியை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிகi;க அதிகரித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கழிவு நீர் கோவிட் தொற்று குறித்த பரிசோதனைகளின் மூலம் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்த ஒட்டாவா வாழ் கனடியர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *