C..G .பிரசாந்தன், எம் நாசார்

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை “கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்” 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்றைய தினம் அதிபர் திருமதி. V. சாந்தினி சர்மா அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு வலயக் கல்வி பணிப்பாளர் . P.R. தேவபந்து அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக, பிரதிக் கல்வி பணிப்பாளர் . K. ரஞ்சித் பிரேமதிலக்க மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கோப்பரேஷன் நிறுவனத்தினரும்,
ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இப் பரிசளிப்பு விழாவில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களிலிருந்து, கோட்டமட்ட தமிழ் தின போட்டி, கணிதப் போட்டி மற்றும் ஆங்கில போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்களும், கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *