( வாஸ் கூஞ்ஞ) 

ஒரு குழந்தையின் தாயான இளம் பெண் கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவனால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாகிய காரணத்தினால் மன விரக்தி அடைந்த நிலையில் தற்கொலைக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மன்னார் வங்காலை நறுவலிக்குளம் மாதிரி கிராமத்தில் வியாழக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளதாக மரண விசாரனை மூலம் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக இறந்தவரின் தாயானவரிடம் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரனை மூலம் தெரியவருவதாவது

இறந்தவர் திருமதி றெஜினோல்ட் வாசுகி. (வயது 22.) ஐந்து வருடங்களுக்கு முன் திருமனம் செய்துள்ளார். இவருக்கு இரண்டரை வயதுடைய ஒரு பெண் குழந்தை உள்ளது.

இரண்டு வருடங்களாக கணவனை பிரிந்து வாழ்ந்துள்ளார். இறந்த பெண் மன்னாரில் ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு கடன் தொல்லையும் மற்றும் பிரிந்து வாழும் கணவனாலும் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவம் அன்று (17) இறந்தவர் தனது பணி தளத்திலிருந்து அரை நேரத்துடன் வீடு திரும்பியிருந்ததாகவும் பின்  இரவு எட்டு மணியாகியும் இவரை வீட்டில் காணவில்லையென தேடியபோது இவர் தங்கள் வீட்டு அறையை உள்ளால் பூட்டிக் கொண்டு கூரையில் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை புரிந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது என மரண விசாரனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மரண விசாரனை அதிகாரியினால் பணிக்கப்பட்டதுடன் பின் இவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படியும் மரண விசாரனை அதிகாரி பொலிசாருக்கு பணிப்புரை வழங்கினார்.

இறந்தவரின் மரண விசாரனையை மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குமணகுமார் மேற்கொண்டிருந்தார்.

தற்போது தாயை பிரிந்த குழந்தை ” அம்மா” என்று ஏங்குகிறது.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *