பாடசாலைகளைச் சுற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் உரிய பணியாளர்கள் இன்மையால் பாடசாலை தொடர்பான துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அந்த பாடசாலைகளுக்கு அருகில் கழிவுகள் குவிந்து டெங்கு நுளம்புகள் பரவுவது அதிகரித்துள்ளதாகவும்இ இது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை சுதந்திர ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *