கனடாவில் சீக்கிய தலைவரின் கொலையுடன் இந்தியாவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வான்கூவாரில் ஹார்தீப் சிங் நிஜார் ன்ற சீக்கிய தலைவர் கடந்த ஜூன் மாதம் சீக்கிய ஆலயத்திற்கு எதிரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளமைக்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இந்திய ராஜதந்திரியை கனடா நாடு கடத்தியுள்ளது.
இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்புடைய எதிர்க்கட்சிகளும் அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.