2030-ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு மனிதா்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமன்றி, வேற்று கிரகத்திற்கு மனிதா்களை அழைத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நிலவு உருவானது எவ்வாறு, அதில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பன தொடர்பான கூடுதல் விபரங்களை இந்த திட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என சீன விண்வெளி ஆய்வு மையத்தின் பிரிவான CMSA (China Manned Space Agency) தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் தொழில்நுட்பம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடையும் என CMSA சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *