சீனாவில் ஒரு பெண் ஒருவர் வினோதமான வேலை செய்து அதன் மூலம் மாத சம்பளம் பெற்று வருகிறார்.

அங்குள்ள நியானன் என்ற 40 வயது பெண் சுமார் 15 ஆண்டுகள் செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அந்த வேலை மிகுந்த அழுத்தம் நிறைந்ததாக இருந்துள்ளது. தினசரி எப்போதும் செல்போன் அழைப்புகள் வந்து நிம்மதி இல்லா வாழ்க்கையை தருவதாக மன உளைச்சளுக்கு அவர் ஆளானார்.

இதை கவனித்த நியானனின் பெற்றோர், அவரிடம் மனம் விட்டு பேசி ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளனர். நீ இப்படி கஷ்டப்பட வேண்டாம். ஏன் நீ வேலையை விட்டுவிடக்கூடாது. உன் பொருளாதார தேவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

பெண்ணின் பெற்றோருக்கு மாதம் 10,000 யுவான் ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. அதில் 4,000 யுவான் தருகிறோம். நீ எங்கள் முழு நேர மகளாக இரு என்றுள்ளனர்.

பெற்றோரிடம் இருந்து இப்படி ஒரு ஆஃபர் வந்ததும் அதை ஜாலியாக ஏற்றுக்கொண்ட நியானன் முழு நேர மகளாக இருக்க ஒப்புக்கொண்டார். தற்போது இந்த வேலை காதல் நிறைந்த ஒன்றாக இருப்பதாகக் கூறும் நியானன், தினசரி மாற்றுப்பட்ட பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாக கூறினார்.

காலை நேரத்தில் ஒரு மணிநேரம் பெற்றோருடன் நடனமாடி, பின்னர் மளிகை சாமன் வாங்க கடைக்கு செல்கிறேன். மாலை நேரத்தில் தந்தையுடன் இணைந்து சமைக்கிறேன். எலக்ட்ரானிக் சார்ந்த வேலைகள், பெற்றோருக்கு டிரைவராகவும், குடும்ப சுற்றுலாகவுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார் நியானன்.

இதை விட சிறந்த வேலை கிடைத்தால் நீ அதற்கு செல்லலாம் எனவும் , அதுவரை நீ இப்படியே இருந்து கொள் என்றும் நியானன் பெற்றோர் கூறியுள்ளனர். இந்நிலையில் , தற்போது முழு நேர மகள் வேலையை மகிழ்ச்சியுடன் பார்த்து வருகிறார் 40 வயதான நியானன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *