ஹுதி போராளிகளின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் செங்கடலில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு படையில் கனடாவும் இணைந்து கொண்டுள்ளது.

செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையணியினால் இந்த பாதுகாப்பு பணி முன்னெடுக்கப்பட உள்ளது.

செங்கடலில் பரப்பில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இந்த பாதுகாப்பு படையணியை உருவாக்கியுள்ளன.

யேமனில் இயங்கி வரும் ஹுதி போராளிகள் செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹுதி போராளிகளின் அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படை உருவாக்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *