டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் வரவேற்புரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து (Leveraging digital economy toward a sustainable & resilient Sri lanka) “நிலையான மற்றும் மீள்திறன்மிக்க இலங்கையை நோக்கி டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்” என்ற தொனிப்பொருளில், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தில் டிஜிட்டல் அபிவிருத்தி தொடர்பான பிராந்திய கூட்டிணைப்பின் பிரதானி சித்தார்த்த ராஜா உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *