நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற தனியார் வைத்தியசாலைகளில் எழுமாறான பரிசோதனைகளை மேற்கொண்டன.
மருந்துகளின் விலை, காலாவதித் திகதி, மயக்க மருந்துகளின் பாவனை, களஞ்சியப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் நீண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன
குறித்த விஜயத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ. எல்.எம் றிபாஸ், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்வாண்மை சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம் பௌசாத், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ். ஜீவராஜா மற்றும் பிராந்திய மேற்பார்வை மருந்தாளர் திருமதி இந்திரகுமார் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *