முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கெப் வாகனத்தினுள் சூட்சும்மான மறைத்து கடத்தப்பட்ட தேக்க மரக் குற்றிகளை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.

சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் 2:30 மணியளவில் தேக்கம் குற்றிகள் மீட்க்கப்பட்டதோடு முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதான சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

3 இலட்சம் பெறுமதியான 13 தேக்க மரக்குற்றிகள் இதன்போது மீட்க்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *