தைவான் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாக சீனா கூறி வந்தபோதும், தனி சுதந்திர நாடாக தைவான் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவுகரம் நீட்டியுள்ளன.

எனினும், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல்வழி ரோந்து பணிகள் மற்றும் ராணுவ பயிற்சிகளை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஜின்குவா செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இதனை, அந்நிய சக்திகளுடன் கைகோர்த்து கொண்டு, தைவான் சுதந்திரம் கோரும் பிரிவினைவாதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை என சீனா கூறியுள்ளது.

இதன்படி, தைவான் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு மண்டலத்திற்குள், இந்த பயிற்சியில் சீனா ஈடுபட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதற்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *