நாளை (31) முதல் பொசன் வாரம் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, மிஹிந்தலை. தந்திரிமலை உள்ளிட்ட
இடங்களை மையப்படுத்தி எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

பொசன் வாரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் இறைச்சிக் கடைகளை மூடுமாறு உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தப் பகுதிகளுக்கு மதுபானம் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் மக்களைக் கோருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *