பலாங்கொடை ஓப்பநாயக்க உடவல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட 6 பேர்  காயமைடந்தனர். இவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் இருந்து எஹலியகொடை பிரதேசத்திற்கு சென்ற டிபென்டர் ஜீப் ஒன்றும் உடவலவ பிரதேசத்தைச் சேர்ந்த மணல் ஏற்றிச்  வந்த லொறியும் ஒன்றுக்கொன்று  மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிபென்டரில் பயணித்த பெண் ஒருவர் உட்பட 5 பேரும் லொறியின் சாரதியும் உட்பட 6 பேருமே காயமடைந்தவர்கள் .


டிபென்டரில் பயணித்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் கொழும்பு வைதிதியசாலைகளுக்கு மாற்றப்பட இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *