பிலிப்பைன்சின் மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவு நோக்கி தனியாருக்கு சொந்தமான பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் கப்பல் ஊழியர்கள் 35 பேர் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு இந்த கப்பல் பசிலன் மாகாணத்தின் பலுக்-பாலுக் தீவு அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்தது. இந்த தீ கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் கப்பலில் இருந்த பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். மேலும் பலர் பதற்றத்தில் கடலுக்குள் விழுந்தனர்.

இது ஒரு புறமிருக்க மறுபுறம் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்கள் மற்றும் கப்பலில் இருந்த பயணிகளை மீட்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த சம்பவத்தில் மீட்பு படையினரின் துரித நடவடிக்கையால் 230 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *