புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் கலாபூசணம் இரா சுப்பிரமணியம் எழுதி வெளியிட்ட மலையகத் தமிழர்களின் இருநூறு வருட வரலாறு என்ற நூல் அறிமுக விழா  இன்று( 20 – 8-2023)  நடைபெற்றது

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சிறப்புரை ஆற்றினார்

விழாவினை திரு யோ புரட்சி தொகுத்து வழங்கினார்

திருமதி சிவகுமார் திலகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் திரு பெருமாள் கணேசன் நூல் ஆய்வு உரையாற்றினார்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன்

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு உமா மகேஸ்வரன்

IBC குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு கந்தையா பாஸ்கரன்

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கௌரவ து.ரவிகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

நூல் ஆசிரியர் கலாபூஷணம் இரா சுப்பிரமணியம் ஏற்புரை வழங்கினார்

சுப்பிரமணியம் சசிகாந்த்  அவர்கள் நன்றியுரை கூறினார்

விழாவினை  ப நாகேந்திரன் அவர்கள்  தலைமையேற்று நடத்தினார்

தமிழ் முற்போக்கு கூட்டணியின்  பரணிதரன் மற்றும் வன்னி ஒருங்கிணைப்பாளர்  தீபன் ஆகியோர் விழா சிறப்பாக நடைபெற தேவையான ஒத்துழைப்பை வழங்கி உடனிருந்து வழி நடத்தினர்

புதுக்குடியிருப்பு பிரதேச சமூக மட்டத் தலைவர்கள் விழா சிறப்பாக நடைபெற மக்களை அணி திரட்டி தங்கள் ஒத்துழைப்பை வழங்கினர்

அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என விழாவின் ஏற்பட்டாளர்களில் ஒருவரான ப.நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *