பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை மாற்றத்தினால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகுவது பெருந்தோட்ட மலையக பகுதிகளே இதனை நன்கு அறிந்தும் நேற்றைய தினம் நடைபெற்ற மண்சரிவு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏன் முன்னறிவித்தல் விடுக்கப்படவில்லை? இதனை பாரியதொரு குற்றமாகவே நான் காண்கின்றேன் ..

உடனடியாக மீண்டும் அப்பிரதேசத்தை மீள் பரிசோதனை செய்து அருகில் உள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் ஆராய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மேற்கொள்வதோடு அம்மக்களை பாதுகாப்பான இடங்களில் மீள்குடி அமர்த்தக்கூடிய நடவடிக்கைகளையும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிதெரிவித்தார்த்துள்ளேன்” என வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *