உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் சபோரிஷியா பகுதிகளில் உக்ரைன் படைகள் நடத்திய பெரிய அளவிலான தாக்குதலை முறியடித்து ரஷ்யா பதிலடி கொடுத்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இகோர் கொனாஷென்கோ தெரிவித்தார்.

அதற்கு முந்தைய நாள், ரஷ்ய தாக்குதல்களால் சுமார் 250 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

பக்முத் நரகாவின் கிழக்குப் பகுதியில் உக்ரைன் தாக்குதல் தொடங்கியுள்ளது என்று உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் அன்னா மாலியா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உக்ரைன் மேற்கொள்ளவிருக்கும் பாரியளவிலான எதிர்த்தாக்குதல் நீண்டகாலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *