லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது. இந்த முயற்சி லெபனானுக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திக்கும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும்.

இந்த போர் இஸ்ரேலுக்கு வாழ்வா? சாவா? போன்றது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் சந்தித்தார்.

அப்போது இஸ்ரேல் மற்றும் அந்நாட்டு மக்களுக்கான தனது நாட்டின் ஆதரவை மெலோனி வெளிப்படுத்தினார்.

இதேபோல், சைப்ரஸ் நாட்டின் அதிபர் கிறிஸ்டோதவுலைட்சும் நெதன்யாகுவை சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *