கனடாவில் 12 வயதான சிறுவன் ஒருவன் நபர் ஒருவரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடமிருந்த கணனியை கொள்ளையிட முயற்சித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டர்ஹம் பிராந்தியத்தின் பிக்கரிங் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கத்தியையும் மீட்டு எடுத்துள்ளனர்.

கத்தி குத்து தாக்குதல் முயற்சி மேற்கொண்ட தினத்திற்கு முதல் நாளில், இந்தச் சிறுவன் கடையொன்றிலிந்து கணனியை களவாட முயற்சித்துள்ளார்.

கொள்ளை, ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *