உலக சாதனை படைத்துள்ள பறவை!

13,500 கிலோமீட்டர், 11 நாட்கள் இடைவெளியே இல்லாமல் அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பறந்து சென்ற பறவை உலக சாதனையை முறியடித்துள்ளது. பார்-டெயில் காட்விட் பறவை (bar-tailed Godwit) ஒன்று அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 மைல்கள் இடைவிடாமல் பறந்து, ​​ஒரு பறவையின் நீண்ட இடைவிடாத இடம்பெயர்வுக்கான முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. 11 நாட்கள் ஓய்வின்றி உணவின்றி பயணம் செய்த அந்த பறவையின் செயற்கைக்கோள் டேக் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் முதுகில் இணைக்கப்பட்ட 5G செயற்கைக்கோள் Tag-ன் படி, […]

உடல் எடையை குறைப்பதற்கு ஆசைப்பட்டு தனியார் நிறுவனத்தை அணுகிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர், சூர்யா (20). இவர் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி, 10 நாட்களாக சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 1ஆம் […]

கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கனடாவில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அந்தவகையில் றொரன்டோவில் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த போது, அவர்களது வீடு வேறு நபர்களினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீட்டு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.இட்டோபிகொக் பகுதியில் இவ்வாறு வீடு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடு சென்றுள்ளதையடுத்து உண்மையான வீட்டு உரிமையாளர்கள் போன்று போலி ஆவணங்களை தயாரித்து இந்த […]