கமரன் தீவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய தீவான கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டிருந்தனர். படகு கடலில் கவிழ்ந்தது படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் […]

தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது

அமெரிக்கா-சீனா இடையிலான உறவு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் கீரியும், பாம்புமாக சண்டையிட்டு வருகின்றன. குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகளும் மோதலை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவின் புதிய வெளியுறவு மந்திரியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற கின் காங், முதல் முறையாக சீன நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமெரிக்காவுடனான பிரச்சினை குறித்து அவர் பேசியதாவது:- அமெரிக்காவின் சீனக் கொள்கை பகுத்தறிவு […]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய்

இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு நிகரான உலகளவில் சிறந்த செயற்பாட்டு நாணயமாக மாறியுள்ளதாக பிரபல ப்ளூம்பெர்க் வணிக இணையதளம் குறிப்பிட்டுள்ளது. எப்படியிருப்பினும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஒரு டொலர் சுமார் 390 ரூபாயாக பின்வாங்கும் என்று Fitch Ratings கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறுவதற்காக, வரிச் சுமைகளை அதிகரிப்பதன் மூலமும், நிவாரணங்கள் குறைப்பத்துள்ளமையினால் இலங்கையின் ரூபாய் பெறுமதி அதிகரித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் வெளிநாட்டு கடன்களை செலுத்த ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரூபாவின் […]

அதிகரித்துள்ள சொகுசு வாகனங்களின் விலைகள்

சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே கூறுகையில், வட்டி வீதங்களின் அதிகரிப்பால் வாகன கொள்வனவும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என இலங்கை […]

கனடாவில் பண வீக்கத்தை பயன்படுத்தி ஈட்டப்படும் கூடுதல் லாபம்

கனடாவில் பண வீக்கத்தை பயன்படுத்தி கூடுதல் லாபம் ஈட்டப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முதல் நிலை மளிகை கடை நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளன. குறிப்பாக கனடாவின் மெட்ரோ, லாப்லோ மற்றும் எம்பயார் ஆகிய மூன்று மளிகைகடை நிறுவனங்களும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. இந்த நிறுவனங்களின் பிரதம நிறைவேற்ற அதிகாரிகள் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது பண வீக்கத்தை பயன்படுத்தி நிறுவனங்கள் உணவுப் பொருட்களில் கூடுதல் லாபம் […]

மோர்கேஜ் ப்ரொபஷனல் கனடா நிறுவனத்தின் கருத்து கணிப்பு

கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது வாழ்நாள் முழுவதிலும் வீடு ஒன்றை கொள்வனவு செய்து விட முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. மோர்கேஜ் ப்ரொபஷனல் கனடா என்ற நிறுவனத்தினால் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் பங்கேற்ற பலரும் தங்களினால் தங்களுடைய வாழ்நாளில் வீடு ஒன்றை கனடாவில் கொள்வனவு செய்ய முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருகின்றமை […]

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நில நடுக்கம்

கனடாவின் புதன்கிழமை அதிகாலை வேளையில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் வான்கூவாரில் பகுதியில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் McNeill துறைமுகத்திற்கு 181 கிலோமீட்டர் தொலைவில் கடற் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் நான்கு தசம் மூன்று மேக்னிடியுட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவி சரிதவியல் அளவீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சீனக் கொள்கை பகுத்தறிவு மற்றும் ஒலி பாதையில் இருந்து முற்றிலும் விலகியிருக்கிறது. சீனா மீதான விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் தவறான பாதையில் தொடர்ந்து வேகமாக சென்றால் மோதல் ஏற்படுவது நிச்சயம். அமெரிக்காவின் இந்த பொறுப்பற்ற செயல் இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களையும், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும். தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா அவமதிக்கிறது. தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது. […]

பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். “பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை” மற்றும் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்” ஆகியவை அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சார்க் அமைப்பில் பெண்களின் […]

கற்றல் உபகரணங்கள்

கொட்டகலை ஹரிங்டன்  தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும்  மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் கொட்டகலை பகுதி சமூக சேவகரும் அரசியல் ஆய்வாளருமான ராமன் செந்தூரன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.  பாடசாலை அதிபர் திருமதி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மற்றும் மாணவர்கள் உட்பட ஹரிங்டன் தோட்ட உரிமையாளர் விஜயபாலவும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.