பங்களாதேஷ் ரயில் விபத்து

பங்களாதேஷ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்துடன் ரயில் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்க படையினர் எவரேனும் தாக்கப்பட்டால்….?

ஹமாஸ் இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்க படையினர் எவரேனும் தாக்கப்பட்டால் அமெரிக்கா திருப்பி தாக்குவதற்கு தயார் என அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். என்பிசியின் மீட் த பிரசில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள பிளிங்கென், ஈரான் ஆதரவு சக்திகளால் மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மோதலின் போது அமெரிக்க படையினர் இலக்கு வைக்கப்பட்டால் அதற்கான பதில் நடவடிக்கையில் ஈடுபட பைடன் நிர்வாகம் தயாராகவுள்ளது எனவும் […]

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு கொழும்பில்

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு அடுத்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டின் போது பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள சாத்தியமான தாக்கம் பற்றியும் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, மறுசீரமைப்பு மூலம் ஏற்படும் மாற்றம், மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அபிவிருத்தி செய்வதில் தொழிலாளர்களின் பங்கு என்பன அமர்வின் மையமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அலுமினிய கம்பிகளை வெளியேற்றும் சமயத்தில் உயர் வெப்பநிலை காரணமாக பாய்லர் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேருக்கு […]

காசாவின் மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள்

காசாவின் மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காசாவில் உள்ள பெரும் மருத்துவமனையான அல்ஷிபா அல்குட்ஸ் இந்தோனேசிய மருத்துவமனை போன்றவற்றிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக பாலஸ்தீன ஊடகங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்குட்ஸ் மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேலின் விமானதாக்குதல்கள் இடம்பெற்றதை காண்பிக்கும் வீடியோவொன்றை ஹமாஸ் டெலிகிராமில் வெளியிட்டுள்ளது. தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் ஹமாஸ் வெளியிட்டுள்ளது.அந்த கட்டிடம் குவைத் மருத்துவமனைக்கு அருகில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.  

ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் எச்சரிக்கை

லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது. இந்த முயற்சி லெபனானுக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திக்கும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும். இந்த போர் இஸ்ரேலுக்கு வாழ்வா? சாவா? போன்றது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் சந்தித்தார். […]

காசல்ரி நீர்த்தேக்கத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு

காசல்ரி நீர்த்தேக்கத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் மலைப்பாம்பு சிக்கியிருப்பதனை கண்டு வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து மலைப்பாம்பினை கரைக்கு கொண்டு வந்தபோது அது உயிரிழந்துள்ள நிலையில் பாம்பினை புதைக்குமாறு வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்நோக்கு மருத்துவமனை தொடங்கிவைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி, குறுகிய காலத்தில் தனது மருத்துவ சேவையால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. திருவண்ணாமலை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்லும் வகையில் மிகப்பெரிய மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதன்பின்னர் மருத்துவமனையை […]

ஒட்டாவாவில் பிரகடனமொன்றில் கைச்சாத்திட்ட 33 மதத் தலைவர்கள்

ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது நிலவி வரும் போர் பதற்ற நிலையின் எதிரொலியாக கனடாவில் குரோத உணர்வைத் தூண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவ்வறான குரோத உணர்வு குற்றச்செயல்களை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டு பிரகடனம் கையொப்பமிட்டுள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஏனைய மதத் தலைவர்களும் கூட்டாக இணைந்து இந்த கண்டன பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளனர். அனைத்து வகையிலான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும் […]

கனடாவில் யாழ்ப்பாண தமிழர் ஒருவருக்கு, ஆயுள் தண்டனை

கனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் முதல் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் இடம்பெற்று […]