மகளிர் T20 உலக கிண்ண தொடரில், ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் நேற்று இரவு பலப்பரிட்சை நடத்தின.

இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அமேலா கெர் 66 ரன்கள் விளாசினார்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது.

இறுதியில், இலங்கை அணி 15.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து சார்பில் அமேலா கெர், லியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *