“ஸ்ரீ பாத” மலை யாத்திரை காலம் ஆரம்பித்து 3 மாதங்கள் கடக்கும் நிலையில் யாத்திரை வரும் பக்தர்கள் கழிவுகளை உரிய முறையில் குப்பை தொட்டிகளில் இடாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கழிவகற்றல் சவாலாக மாறியுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நல்லத்தண்ணி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உக்கா கழிவுகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுவரை சேர்ந்துள்ள கழிவுகளின் அளவு 8 டொன் என தெரிவிக்கும் மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள் பக்தர்கர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே எமது நாட்டு வளங்களை பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் என மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *