கேப்டவுனில் நேற்றிரவு இடம்பெற்ற மகளீர் உலகக் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலிய மகளீர் அணி, இந்திய அணியை 5 ஓட்டங்களால் வென்றுள்ளது.

இதன்படி தொடர்ந்து 7வது முறையாக உலக மகளீர் உலகக் கிண்ண T20 தொடரின இறுதிச் சுற்றுக்கு அவுஸ்திரேலிய மகளீர் அணி முன்னேறியது.

நேற்றைய தீர்மானமிக்க போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய மகளீர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

டாப் ஆர்டர் வீராங்கனைகள் ரன் குவிக்க தவறிய நிலையில், கடுமையாக போராடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

எனினும் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியில் தென்னாபிரிக்க மகளீர் அணி இங்கிலாந்து மகளீரை இன்று மாலை 6.30க்கு எதிர்த்தாடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *