தேசிய மீலாதுன் நபி விழா எதிர்வரும் 22 ஆம் திகதி மன்னாரில்!

( வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் நடைபெற இருக்கும் 39 ஆவது தேசிய மீலாதுன் நபி விழா எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 39 ஆவது தேசிய மீலாதுன்  நபி விழா முசலி சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலத்தில் இம்மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது. இதற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் புத்தசாசன சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் கௌரவ  விதுர விக்ரமா நாயக்க […]

அறிமுகமில்லாதவர்களின் நட்பு மற்றும் கைத்தொலைபேசிப் பாவனை மீது நாம் கவனமாக இருக்கவேண்டும் : நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா.

நூருல் ஹுதா உமர் ஆசிரியர்கள் மேய்ப்பாளர்கள் என்ற அடிப்படையில் என்றும் இறைவனிடத்தில் தங்களுடைய கடமைக்கு பொறுப்புச் சுமத்தப்பட்டு பொறுப்பு கூறுகின்றவார்களாக இருக்கின்றார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றார்கள் அந்த மேய்ப்புப் பணியிலிருந்து ஆசிரியர்கள் தவறிவிட முடியாது. ஆனால் இன்று தமது கடமையைச் சரியாகச் செய்கின்ற ஆசிரியர்கள் கூட சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளையும், இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர் மாணவர்கள் ஆசிரியர்களுடைய வழிப்படுத்தலை உதாசினம் செய்வதனாலேயே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன என அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா தெரிவித்தார். […]

மன்னார் சிவராஜா வித்தியாலயத்தில் பிள்ளையார் சரஸ்வதி சிலைகள் திறப்பு

( வாஸ் கூஞ்ஞ) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மோட்டக்கடை சிவராஜா இந்து வித்தியாலயத்தில் பிள்ளையார் மற்றும் சரஸ்வதி தெய்வச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன. இந்த சிலைகளை ஞாயிற்றுக்கிழமை  (15) காலை நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்த குமார் அவர்கள் திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான குரு சிவஸ்ரீ கதிரேசன் குருக்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை […]

நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது – ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என கூறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் தலைவர்களுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அரசாங்கம் வருமானத்தை அதிகரித்து விரைவாக வருமான இலக்குகளை நோக்கி நகர வேண்டும். மேலும் இந்நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது, […]

தென்கிழக்கு பல்கலையில் அடையாள வேலை நிறுத்தம்!

நூருல் ஹுதா உமர் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைவாக ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து (இன்று) 2023.10.12 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில், ஒரு மணித்தியால அடையாள பணிப்பறக்கணிப்பு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இடம்பெற்றது. இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கள் தங்களது போராட்டத்தை […]

சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கான இரண்டு முக்கிய மருந்துகள் நாட்டில் இல்லை – சஜித்

  எமது நாட்டின் சுகாதாரத் துறையின் துன்பகர கதையின் மற்றொரு அத்தியாயம் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு அவற்றை செயல்படுத்த தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்,Basiliximab, Antithymocytic Globulin என்ற மருந்துகளும் தடுப்பூசிகளும் இரத்தமாற்றம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அவசியம் என்றாலும்,அவை தற்போது நாட்டில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டாலும்,மருந்துப் பொருள் […]

நிசாம் காரியப்பருக்கு கல்முனையில் இருந்து கண்டனம் :

நூருல் ஹுதா உமர் இப்போதைய தலைவர் ஊடாக பெரிய பதவியை அடைய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் அஸ்ரபை கலங்கப்படுத்த வேண்டியது யாருக்கும் தேவையில்லை. தேவையானவர்கள் பதவிகளை எப்படியாவது யாரை காக்காய் பிடித்தாவது பெற்று கொள்ளலாம். முஸ்லிங்களின் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத, தாய் மண்ணுக்கு ஆதரவாக செயற்பட முடியாத, சுமந்திரன் போன்றவர்கள் கேட்கும் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்க முடியாத நிஷாம் காரியப்பர் போன்றவர்கள் தலைவர் அஸ்ரபை கொச்சைப் படுத்துவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என ஸ்ரீ லங்கா […]

கொழும்பை மையமாக, முழுநாட்டை பரப்பாக, கொண்டு தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம் உதயமாகிறது- மனோ கணேசன் எம்பி  

    தமிழ் சமுதாயத்தில், எஞ்சியுள்ள இன்றைய மிகப்பெரிய பலம் கல்வி ஆகும் என்பதை எமக்கு என்றுமில்லாதவாறு உணர்த்தும் காலம் இதுவாகும். ஆகவே, தமிழர் கல்வி துறையை போற்றி பாதுகாத்து, பலவீனமான புள்ளிகளை அடையாளம் கண்டு, கூட்டிணைந்து நாம் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.  இந்நோக்கில், தமிழ் மாணவர்களின் முன்பள்ளி கல்வி முதல் மூன்றாம் நிலை கல்வி வரையிலான ஒட்டுமொத்த தமிழர் கல்வி கட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்க இன்று நாம் அங்குரார்ப்பணம் செய்துள்ள தமிழர் கல்வி […]

சகல வீதிகளையும் புனரமைப்பு செய்ய நடவடிக்கை -ஜனாதிபதி

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதம் அடைந்த சகல வீதிகளையும் புனரமைப்பு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மத்திய மத்திய அதிவேக நெடுஞ்சாலை உட்பட அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களையும் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிபுரி விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் இந்த பணிப்புரையை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடுத்துள்ளார். இதேவேளை, […]

மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் இருப்பவர்கள் தாய் மண்ணை காட்டிக்கொடுக்கிறார்கள் – ஹரீஸ் MP

நூருல் ஹுதா உமர் மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் நிறைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதில் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கல்ல. முஸ்லிம் சமூகத்தின் உயர்ந்த திறமைசாலிகள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்கள் மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் இருந்து கொண்டு தான் வாழும் எமது மண்ணை காட்டிக்கொடுத்தும் ஊரின் மகிமைகளை கொச்சைப்படுத்திக் கொண்டும், ஊடகங்களில் வந்து தாய் மண்ணையே காட்டிக்கொடுத்துக் கொண்டும், தென்கிழக்கு பிராந்தியத்தில் புகழ் பூத்த ஊரின் மகிமைகளையும், தேவைகளையும் பற்றி மோசமான வார்த்தைகளை கொண்டு கொச்சைபடுத்தி […]