ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் அவரது வீடு முற்றுகை

நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவரது வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை அரசடி வீதியிலுள்ள ஊடகவியலாளர் எஸ். ஆர். கரனின் வீடே இவ்வாறு நேற்று (27.01.2023) மாலை முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்கு முன்புள்ள வயல் காணியில் எல்லைக்காக போடப்பட்டிருந்த சீமெந்து தூண் நேற்று மாலை உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் பணியாற்றும் நபராலே குறித்த தூண் உடைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சுட்டிக் காட்டியுள்ளார். […]

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள்

அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை எந்த வகையிலும் சீர்குலைத்தால் நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின்படி நாடுகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் இவ்வாறு சீர்குலைக்கப்படலாம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் […]

ராகலையில் சுற்றிவளைப்பு

ராகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட ஹைபொரஸ்ட்,ராகலை,உடபுஸல்லாவ நகரங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இப்பரிசோதனையில் மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாத மற்றும் காலாவதியான பல உணவு பொருட்கள் மீட்கப்பட்டதோடு சுகாதாரம் இல்லாமல் உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு பல பயன்படுத்த முடியாத பொருட்களை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது . நீலமேகம் பிரசாந்த்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை  ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படும். இக்கூட்டத்தொடர் முடிவடைந்து புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சம்பிரதாயப்படி ஜனாதிபதியினால் அக்கிராசன உரை நிகழ்த்தப்படும். அந்தவகையில் பாராளுமன்றத்தில் ஆற்றப்படும் அக்கிராசன உரையில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக நாட்டில் அமுல்படுத்த […]

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் மனித உரிமைகள் கருதி மின்வெட்டுடை அமுல் அமுல்படுத்தாது இருக்க நேற்று முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. எனினும் பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலாகியii குறிப்பிடதக்கது.

கச்சதீவு உற்சவம்

இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும், 3,500 ஆயிரம் இந்திய பக்தர்களும், ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பெற்றதோடு இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின் இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் கட்சி அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் தமது  இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்-VS

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை மலையக மக்கள் தமது  இருப்பை பாதுகாத்துக் கொள்ள பாவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரரும், LJEWU பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் முன்னணி ஊடகம் ஒன்றிடம் இதனை கூறியுள்ளா (மலையக தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. மலையக மக்கள் இன்று வரை அனைத்து உரிமைகளையும் போராடியே பெற்று வருகின்றனர. மாறாக எவரும் தட்டில் வைத்து கொடுக்கவில்லை. இன்று தோட்ட காணிகள் முறையாக பராமறிக்கப்படுவதில்லை. அதனால் பாம்பு, சிறுத்தை, குளவி […]

மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறுகையில், இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. மருந்துப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு இலங்கைக்கு பொருட்கள் தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் […]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் மைத்திரிபால சிறிசேன

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவலாயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கால் ஒன்றை இழந்த ஒருவரும், வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆண்டகையும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எச்சரித்து குற்றவாளி கூண்டிற்குள் ஏறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் மைத்திரிபால சிறிசேன பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் முன்னிலையான மைத்திரிபால குற்றவாளி கூண்டிற்குள் ஏமாறாது தவிர்த்தார். இதனையடுத்து அவரை […]

பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை தொடங்கப்போவதில்லை

கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர். இந்தநிலையில் காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் […]