ஜனாதிபதி ரணில்

நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ள “புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி” தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி ரணில் […]

வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். 26.01.2023 மற்றும் 27.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். […]

மலையக தமிழர் பிரச்சினை பற்றியும் பேசாவிட்டால் நாம் ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்?

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனவரி 26 சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளவில்லை. எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தை தொடர்பில்  அதிருப்தியை வெளியிட்டுள்ளார், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி. இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை […]

ஸ்கொட்லண்ட் வருகிறார்

பொதுநலவாய நாகளின் பொதுச் செயலாளர் பெட்டிஷியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் 5 நாள் பயணமாக இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கு இணங்க 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் அவர் கலந்துக்கொள்ளவுள்ளதாக பொதுநலவாய நாடுகள் காரியாலயம் தெரிவித்துள்ளது. பெட்டிஷியா ஸ்கொட்லண்ட் அடுத்த மாதம் முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளார். தனது விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

திருமுருகன்

விழுந்தாலும் மீண்டெழக்கூடிய அரசியல் தந்திரம், மந்திரத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நன்கு கற்றே வைத்துள்ளது. குறிப்பாக 1965 இல் நடைபெற்ற தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த சுதந்திரக்கட்சி 1970 இல் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதுபோலவே இந்த உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக எமது கட்சி எழுச்சிபெற்று – வீறுநடை போடும் –  என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், சமூக சேவையாளருமான சதாநந்தன் திருமுருகன் தெரிவித்தார். கட்சி ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே திருமுருகன் […]

சர்வகட்சிக் கூட்டம்

ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக் கூட்டம் இன்று(26) பிற்பகல் 04 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ் தேசியக் […]

புலமைப்பரிசில் பரீட்சை

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. www.doenets.lk, www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களுக்குள் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீமட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த முறை புலமை பரிசில் பரீட்சைக்கு 334,805 பேர்p விண்ணப்பித்திருந்தனர். எனினும் 329, 668 பேர் பரீட்சைக்கு தோற்றினர். இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல்; […]

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியியாகியுள்ளதாக பரீமட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பார்வையிட முடியும் என nரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார. இதன்படி ஊவா, மத்திய, கேகாலை,, யாழ், மேல் மாகாணம்;; உள்ளிட்ட மாகாணங்களைச் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். வெட்டு புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற தவறிய மாணவர்களை அதைரியப்படுத்தாது நம்பிக்கையை ஊட்டுவது எமது பொறுப்பாகும். சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதித்த […]

தேர்தல் ஒன்று தேவையா? இல்லையா?- மத்திய வங்கி (Video)

இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்று தேவையா? இல்லையா? என்பது மத்திய வங்கிக்கு சம்பதமில்லா விடயம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். தேர்தல் செவீனம் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கு, தேர்தலுக்கான செலவீனம் திறைசேரிக்கு சம்பந்தமானது எனவும் தெரிவித்தார். IMFன் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து கடன் வழங்குனர்களிடம் இருந்தும் நிதி உத்தரவாதத்தை மிகக்குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ள […]

குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட்டம்

மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. அதேபோல சுகாதார நலனுடன்வாழ நாளாந்தம் குறிப்பிட்டளவு சுத்தமான நீரை கட்டாயம் பருகியாக வேண்டும். எனினும், நீர்வளம்மிக்க மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில் குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட வேண்டியுள்ளது. ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு ‘வலி சுமந்த கதையாகும். அந்தவகையில்  அக்கரப்பத்தனை பன்சல கொலனி  மக்கள்  ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கவேண்டியுள்ளது. சிலவேளைகளில் நீர் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது. மேற்படி கொலனியில் […]