நாட்டின் ஸ்தீரனமான செயற்பாடுகள் குறித்து தூதுவர்களுக்கு அமைச்சர் அலிசப்ரி விளக்கம்

நூருல் ஹுதா உமர் கொழும்பில் உள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளுக்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கமளிக்கும்; நிகழ்வு இன்று காலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களின் கலந்து விளக்கமளித்த இந் நிகழ்வில் கீழ்வரும் செயற்பாடுகள் விளக்காட்சிகள் மூலம் விரிவாக தெளிவாக்கப்பட்டன: 1. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கண்டுள்ள முன்னேற்றங்களும் அவற்றை கண்டறிவதில் அண்மையில் […]

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானம்!

  குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நாளைய தினம் (18) குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை ஊடகவியாலளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். இதன்போது ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை […]

பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே இருக்கவேண்டும்!, தமது நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர் நசீர் அஹமட்

  சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பொலிஸ் அதிகாரங்களும் பிரத்தியேகமாக மத்திய அரசாங்கத்திடம்  மாத்திரமே ஒப்படைக்கப்பட வேண்டும் என சுற்றாடல் அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான  நசீர் அஹமட், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக  கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் பொலிஸ் அதிகாரம் உட்பட பல விடயங்களை விளக்கியிருக்கிறார். குறிப்பாக இலங்கைவாழ் முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களின் பங்கேற்பின்றி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை  அமுல்படுத்துவதன்  மூலமோ அல்லது வேறு […]

நுவரெலியாவில் ஏணி நூல் வெளியீட்டு நிகழ்வு

  டி சந்ரு திவாகரன் மலையக ஆசிரியர் முன்னணியின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமை பரீட்சை மாணவர்களுக்கான வழிகாட்டி நூலாக ஏணி நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது கல்வி இராஜாங்க அமைச்சின் முழுமையான அனுசரணையுடன் நுவரெலியா வலயத்தின் கீழ் இயங்கும் கோட்டம் ஒன்று இரண்டு மூன்றுக்குட்பட்ட சுமார் 900 மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டியான ஏணி நூல் வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த […]

தனியார் வைத்தியசாலைகளில் திடீர் சோதனை!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற தனியார் வைத்தியசாலைகளில் எழுமாறான பரிசோதனைகளை மேற்கொண்டன. மருந்துகளின் விலை, காலாவதித் திகதி, மயக்க மருந்துகளின் பாவனை, களஞ்சியப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் நீண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன குறித்த விஜயத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் […]

அன்னமலை வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயம்!

நூருல் ஹுதா உமர் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP திட்டத்திற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அன்னமலை வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ. எல்.எம் றிபாஸ், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். சி. எம். மாஹிர் ஆகியோர் விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் […]

நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய மஹோட்சவ கொடியேற்றம்!

  ( வாஸ் கூஞ்ஞ) 17.08.2023மன்னார் நானாடடன் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வருவடாந்த மஹோட்சவத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வும் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு திறப்பு விழாவும் புதன்கிழமை (16) காலை 10 மணியளவில்  ஆலயத்தின் திருவிழா பிரதம குரு சி.ஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான அம்பிகையின் பக்தர்கள் கலநது கொண்டார்கள் வழமையாக 10 நாட்கள்  கொண்ட மஹோட்சவத் திருவிழாவானது  இம்முறை 15 […]

பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் அவசரக் கோரிக்கை.

(இப்னு ஷெரீப்) எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையிலுள்ள சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியிலுள்ள ஒடுக்கமான பாலத்தை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கல்முனை மாநகர சபைப் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தின் மிகவும் பழைமை வய்ந்த  இப்பாலம் பல தசாப்தங்களாகியும் இதுவரை எந்தவிதமான புனரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் காணப்படுவதுடன் சாதாரண மற்றும் கனரக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாதளவு பழுதடைந்துள்ளது.  இப்பிரதேசத்தின் அதிகளவான பயன்பாட்டிற்குரிய வீதிகளுள் ஒன்றாகக் கருதப்படும் இவ்வீதியின் பாலம் இரண்டு […]

மருதமடு பெருவிழாவில் மூன்று பக்தர்கள் திடீர் மரணம்!

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள உலக பகழ்பெற்ற மருதமடு அன்னையின் ஆவணி மாத (15) பெருவிழாவில் சுமார் ஆறு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதில் மூன்று நபர்கள் திடீர் மரணத்துக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. மன்னார் மருதமடு ஆவணி மாத பெருவிழாவில் நீண்டகாலத்துக்குப் பின் இம்முறை பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டவர்களில் மூன்று நபர்கள் மடு ஆலயப் பகுதியில் திடீர் மரணத்தை தழுவிக் கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. […]

தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதை போன்று நடைமுறை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அவசியம்! அமைச்சர் டக்ளஸ்

  தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த முன்னெடுப்புக்கள் அர்த்தபூர்வமானவையாக அமைய வேண்டுமாயின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்ப்படுத்தல் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பாக நேற்று(16.08.2023) ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே குறித்த […]