கொழும்பு புதுக்கடை பொதுமலசல கூடத்தில் கோடூரம்..பெண்கள் பகுதிக்குள் ஆண்கள்! தட்டி கேட்கும் அன்னை ப்ரீதா
![](https://annachinews.com/wp-content/uploads/2023/08/Screenshot_20230825_143127_Gallery.jpg)
கொழும்பு புதுக்கடை டாம் வீதியிலுள்ள பொது மலசல கூடத்தில் பாவனைக்காக செல்லும் ஏழை பெண்களை தலைகுனிய செய்யும் நிகழ்வொன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இலங்கையின் முன்னணி பத்திரிகைகளை விநியோகம் செய்யும் ஏஜன்டான அன்னை ப்ரிதா காலை கடன்களை கழிப்பதற்காக டாம் வீதியில் உள்ள பொது மலசலகூடத்திற்கு சென்றுள்ளார். அங்கே ஆண்களில் சில காமூகர்கள் அரை நிர்வாணமாக அங்குமிங்கும் நடமாடுவதை பார்த்த தாய் அதிர்ச்சி அடைந்தார். இதனை அவர் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த போதும் […]
மடு ஆலய சூழலில் தங்கியிருப்போர் விஷ ஜந்துக்கள் குறித்து அவதானம்!
![](https://annachinews.com/wp-content/uploads/2023/08/T.VIOTHAN.jpg)
(வாஸ் கூஞ்ஞ)மன்னார் மருதமடு ஆலயப் பகுதியில் கடந்த ஓரிரு தினங்கள் ஒரு சில மணி நேரம் பெய்த மழை காரணமாக பல்வேறுபட்ட விஷ ஜந்துக்கள் வெளியேறியமையால் மடு ஆலய சூழலில் தங்கியிருப்போர் விஷ ஜந்துகளால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டமையால் இங்கு தங்கி வாழ்வோர் விழிப்புடன் இருக்கும்படி மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்தார். மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆவணி மாதம் பெருவிழாவுக்கு (15) ஏழு லட்சம் பக்தர்கள் வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக் […]
ரஷ்யா திரைப்பட விழாவில் முதல் இடத்தை பெற்ற மலையக தமிழனின் ” தேத்தண்ணி” – இயக்குநர் ஒனாசியஸ் பர்னாண்டோ
![](https://annachinews.com/wp-content/uploads/2023/08/IMG-20230812-WA0061-1024x768.jpg)
ரஷ்யாவில் நடைப்பெற்ற சர்வதேச இளைஞர் கீனோ திரைபட விழாவில் நுவரெலியாவை சேர்ந்த ஒனாசியஸ் பர்னாண்டோ இயக்கிய ‘The Tea” குறும்படம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் இலங்கை வருகையின் 200 வது வருடத்தில் கிடைப்பெற்றது தமக்கும் சமூதாயத்திற்கும் பெருமை என குறுந்திரைப்பட இயக்குநரான ஒனாசியஸ் பர்னாண்டோ கூறினார் ச . ச இலங்கை குறுந்திரைப்படமான தேத்தண்ணி( the Tea ) முதல் இடத்தைப்பெற்று வெற்றிப்பெற்றது , இதற்கு அனைத்து […]
நிக்லஸ் பூரானின் அதிரடி ஆட்டம்! மே.தீவுகள் 2 விக்கட்டுகளால் வெற்றி!
![](https://annachinews.com/wp-content/uploads/2023/08/20230806_121929-1024x731.jpg)
இந்திய. மேற்கிந்திய தீவுகள் அணிகளுகிடையில் கானாவில் இன்று நடைப்பெற்ற 2 வது சர்வதேச T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. இதில் திலக் வர்மா நிதானமாக ஆடி 52. ஓட்டங்களை எடுத்தார். அதேபோன்று இஷான் […]
வென்றது நீதி! என்ன நடந்தாலும் என் கடமை மாறாது ! ராகுல் காந்தி
![](https://annachinews.com/wp-content/uploads/2023/08/20230804_055934-778x1024.jpg)
“என்ன நடந்தாலும் என் கடமை மாறாது” – உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ராகுல் காந்தி டூவிட்டரில் பதிவு செய்துள்ளார் Come what may, my duty remains the same. Protect the idea of India. — Rahul Gandhi (@RahulGandhi) August 4, 2023 அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோதி’ என்ற […]
குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பாலை குடித்த நபருக்கு………….?
![](https://annachinews.com/wp-content/uploads/2023/07/bty.jpg)
கனடாவில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பாலை குடித்த நபருக்கு 20000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ரியல் எஸ்டேட் முகவர் ஒருவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கான வீடு ஒன்றை காண்பிப்பதற்காக சென்றிருந்த வேளையில் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியின்றி கொள்கலனில் இருந்த பாலை இந்த முகவர் அருந்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மைக் ரோஸ் என்ற ரியல் எஸ்டேட் முகவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீடு ஒன்றை சிலருக்கு காண்பிப்பதற்காக குறித்த வீட்டில் இருந்த போது, அந்த […]
அமெரிக்காவைப் பழிவாங்குவோம் – வட கொரியா சூளுரை
![](https://annachinews.com/wp-content/uploads/2023/06/1026382-1024x599.jpg)
வடகொரியாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு கொரிய போர் தொடங்கப்பட்டதன் 73வது நினைவு நாளை அனுசரித்தனர். அப்போது அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போர் நடத்துவோம் என்று அவர்கள் சூளுரைத்தனர். வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் 1,20,000 மக்கள், மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் மக்கள் தங்களின் கைகளில் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருப்பதை ஆவணப்படுத்தியிருந்தது. “ஒட்டுமொத்த அமெரிக்க நிலப்பரப்பும் எங்களின் துப்பாக்கிகளின் வீச்சுக்குள் […]
உலகில் வாழத் தகுதியான 10 நகரங்கள்…
![](https://annachinews.com/wp-content/uploads/2023/06/1687421082-most-livable-city_L.jpg)
உலகில் வாழத் தகுதியான நகரங்கள் குறித்த சமீபத்திய அறிக்கையை “”The Economist”” வெளியிட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான நகரமாகப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டன. தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கல்கரி, சுவிட்சர்லாந்தின் […]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவை வழங்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை முன்வைக்கும் போதே பிரதி உயர்ஸ்தானிகர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறையுமா?
![](https://annachinews.com/wp-content/uploads/2023/06/1687093933-be_L.jpg)
உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் விரைவில் குறைக்க வேண்டும். எவ்வாறாயினும், பேக்கரி பொருட்களுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகள் குறைவடையாத காரணத்தினால், தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்பது சிக்கலாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். இதேவேளை, […]