ICC

Share

Share

Share

Share

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் காப்பாளர் அனுஷ்கா சஞ்சீவனிக்கு சர்வதேச கிரிக்கெட் மகளிர் பேரவை (ICC) அபராதம் விதித்துள்ளது.

T20 உலகக் கிண்ண தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது ICC ஒழுங்கு விதிகளை மீறியமையே இதற்குக் காரணம்.

இந்த ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அனுஷ்கா சஞ்சீவனி தனது ஒழுக்கக் குறியீட்டில் முதல் நிலைக் குற்றத்தைச் செய்ததாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அந்த போட்டியின் பங்களாதேஷ் இன்னிங்ஸின் 10 ஆவது ஓவரில் சோபனா மோஸ்டெரி ஆட்டமிழந்த பிறகு, அனுஷ்கா சஞ்சீவனி அவுட்டானதைக் கொண்டாடும் போது டிஸ்மிஸ் செய்யப்பட்ட பேட்ஸ்மேனை அணுகி ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

அதன்படி, அவர் ஒழுங்கு விதி 2.5ஐ மீறியதாக ICC அறிவித்தது.

இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 15% அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல் அபராதத்துடன், அனுஷ்கா சஞ்சீவனியின் ஒழுக்காற்றுப் பதிவில் பெனால்டி குறியும் சேர்க்கப்பட்டுள்ளது.

பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...