கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மூன்றில் இரண்டு கனடியர்கள் பிரதமர் மீது பாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பொது தேர்தலுக்கு முன்னதாகவே பிரதமர் பதவி விலக வேண்டும் என மக்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் மக்கள் பிரதமர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுகாதார நலன், அரசாங்கச் செலவுகள், காலநிலை மாற்றம், வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *