இலங்கை வாழ் மலையக தமிழர்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும்

Share

Share

Share

Share

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமூக நீதி கொள்கைக்கு ஏற்ப இலங்கை வாழ் மலையக தமிழர்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை அயலகத்தமிழர் தின மாநாட்டில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆற்றிய உரையில் இதனை வலியுறுத்தியுள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவளி தமிழர்களின் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரதிநிதிகளை ஒன்றுகூட்டி தமிழ்நாடு அரசு சென்னையில் இந்த மாநாட்டை நடத்தியது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்…

”இலங்கையில் தமிழர் என்றால், அது இலங்கையில் வாழும் மலையக தமிழர், ஈழத்தமிழர் ஆகிய இரண்டு சமூகத்தவரையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

எம்மை இந்திய வம்சாவளி என்று சொல்வதை விட தமிழக வம்சாவளி என்று கூறுவதே பொறுத்தமானது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமூக நீதி கொள்கைக்கு ஏற்ப இலங்கை வாழ் மலையக தமிழர்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும்’ என்றார்.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு