உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய மக்;கள் முன்னணியின் தலைவர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) நடைப்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இராஜாங்க கல்வி அமைச்சர் இதனை கூறினார்.

தற்போதைய நிலையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதை காட்டிலும் மாகாண சபைகளுக்கான தேர்தலை வலியுறுத்துவதே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் அவர்களை மீண்டும் திசை திருப்ப சிலர் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக பெருந்தோட்ட மக்களும் இன்று பொருளாதார சிக்கலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் கடக்கின்ற போதிலும் இன்றும் அவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்வது கவலையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட்டு அவர்களும் தேசிய நீரோட்டத்திற்குள் சமமாக நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *