அத்தியாவிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இதனை
கூறியுள்ளார்.

“மின்சாரம், எரிபொருள், கேஸ் உள்ளிட்ட வரிசைகள் இப்போது குறைந்துள்ளன. கடந்த வாரமும் இது போன்றே அறிவிக்கப்பட்டது. அப்படி நடக்கவில்லை.

ஆகவே சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பில் சிறந்த நிலைப்பாட்டில் உள்ளது அதனை குழப்பதற்கே சிலர் முயற்சிக்கின்றனர்

ஆகவே சில துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறினால் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *