இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளும் விவாதத்திற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இன்று (20) காலை ஏப்ரல் 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்களிலும் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கூடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *