காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன. இந்நிலையில், காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் வருகிற 30-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, […]

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. அதோடு, அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு சத்தங்கள் கேட்டன . ஈராக்கிய படையினர் அந்த விமானதளத்தை மூடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளதுடன், உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை கடந்த வாரம் ஈரானிற்கு நெருக்கமான ஈராக்கிய குழுக்கள் ஹமாஸ்விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்காவின் நிலைகளை […]

காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள்

காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமல்லாது எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து 14-வது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரை, வான் மற்றும் […]

மன்னாரில் சரியான தலைமைத்துவம் இல்லாமையால் தொடர்ந்து பின் தள்ளப்படுகின்றது. அருட்பணி எஸ்.மாக்கஸ்

(வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் ஒரு சரியான தலைமைத்துவம் இல்லாமையாலேயே இன்று மன்னார் தொடர்ந்து பின் தங்கி காணப்படுவதுடன் பல திட்டங்கள் தோல்வியிலும் அழிந்தும் செல்லுகின்றன என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். -உண்மை மற்றும் நல்லிணக்க சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தில் ஐந்து கிராமங்களின் பிரதிநிதிகளுடனும் மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பனர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி […]

இந்திய வம்சாவளி தமிழர்களின் அடையாளத்தை முடக்காதே! கொதித்தெளும் வடிவேல் சுரேஷ் MP

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கைத் தமிழர் என அடையாளப்படுத்த பதிவாளர் திணைக்களத்தால் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அண்மையில் பதிவாளர் நாயகத்தால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட பதிவாளர்க்கும் மேலதிக மாவட்ட பதிவாளர்க்கும் அனுப்பப்பட்டுருகின்ற சுற்றுநிறுபத்தில 11,1 /2023 என்ற இலக்கத்தை கொண்ட சுற்றுநிறுபத்தின் மூலமாக அரசாங்க காரியாலயங்கள், பிறப்புச்சான்றிதழ் மற்றும் ஆள் அடையாளபடுத்த கூடிய அனைத்து ஆவணங்களிலும் இனத்தை […]

வியட்நாமில் அதிகரித்து வருகின்ற டெங்கு நோய் பரவல்

வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மாதம் இறுதிவரை ஒருவாரத்திற்கு 3 ஆயிரம் என டெங்கு பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த மாதம் தொடங்கியது முதல் இருமடங்காக உயர ஆரம்பித்துள்ளது. இதுவரை டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தலைநகரான ஹனோயில் மட்டும் 20,548 பேர் டெங்கு காய்ச்சலால் […]

கென்யாவில் பெண்கள் மாத்திரமே வாழ்ந்து வரும் கிராமம்

கென்யாவில் பெண்கள் மாத்திரமே வாழ்ந்து வரும் கிராமம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் நைரோபியில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள உமோஜா என்ற கிராமத்திலேயே இவ்வாறு பெண்கள் மாத்திரம் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அந்த கிராமத்தில் ஆண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழக்கூடிய பெண்கள் அனைவரும் சம்பூர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இங்கு 40 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமம் சுமார் […]

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இராணுவ கண்காட்சி – தென்கொரியா

இராணுவ பொருட்களை ஏற்றுமதி செய்யும் உலகின் 4 ஆவது பெரிய நாடாக மாறுவதை தென்கொரியா நோக்கமாக கொண்டு செயல்படுகிற நிலையில் அதன் ஒருபகுதியாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவிலான இராணுவ கண்காட்சியை தென்கொரியா நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இராணுவ கண்காட்சி சியோல் ஏ.டி.எக்ஸ் – 2023 என்ற பெயரில் சியோங்னாம் அருகே உள்ள விமான தளத்தில் நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் அமெரிக்கா, கனடா, பிரேசில் உள்ளிட்ட 55 நாடுகளின் […]

ஜெர்மனி நாட்டில் யூத வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர்கள்

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்தில் யூத வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து வெடிக்கும் தன்மை உடைய வேதிப்பொருட்களை வீசிவிட்டு தப்பியோடினர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதேவேளை, தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஜெர்மனி பிரதமர் […]

காசாவுக்கு 832 டொலர்கள் நிதியுதவி வழங்கவுள்ள அமெரிக்கா

காசாவுக்கு 832 அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு தமது ஆதரவை வழங்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்ரேலின் மத்தியப் பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்புவதற்கும் அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.