இந்திய வம்சாவளி மக்களின் அடையாளத்தை அழிக்க முற்பட வேண்டாம்! பதிவாளர் நாயகத்தின் தீர்மானத்தை எதிர்க்கும் அமைச்சர் ஜீவன்

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.” என இதொகா பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கூறுகிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் பிறப்பு சான்றிதழ் உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்குரிய ஆவணங்களில் “இனத்தைக் குறிப்பிடும் போது இந்திய தமிழ் / சோனகர் என்பதை இலங்கைத் தமிழ்/ சோனகர் என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்” எனும் […]

ஆசிரியப் பெருந்தகைகளுக்கு பேசாலையில் பெருவிழா!

(வாஸ் கூஞ்ஞ) கருவாகி , உருவாகி , குருவாகி , திருவாகி  நின்று அகவிருள் அகற்றி . அறிவொளியூட்டி , நல்நெறி காட்டி நிற்கும் ஆசிரியப் பெருந்தகைகளை நினைத்து மன்னார் மாவட்டத்தில் பல இடங்களிலும் ஆசிரியர் தினம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் பேசாலை மன் சென். மேரிஸ் வித்தியாலயத்தில் செவ்வாய் கிழமை (17) ஆசிரியர் தினமும் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவும் மிகவும் சிறப்பாக பெற்றோர்களால் நடாத்தப்பட்டது. (வாஸ் கூஞ்ஞ)

கொங்கோடியா தோட்டப் பாதையில் பாரிய மண்சரிவு! சாரதிகளே அவதானம்!

¶ (  நூரளை பி.எஸ். மணியம்) தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கந்தப்பளை நகரில் இருந்து கொங்கோடியா, கல்லாலவத்தை தோட்ட வழியாக இராகலையை நோக்கி செல்லும் பிரதான வீதியில் இந்த மண் சரிவு ஏற்பட்டு குறித்த வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  அதேநேரத்தில் காலநிலை மாற்றத்தினால் கந்தப்பளை பிரதேசத்தில் இன்று (18) புதன்கிழமை  அதிகாலையில் முதல் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொங்கோடியா தோட்ட பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்டு செப்பணிடப்பட்ட […]

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக சலீம் நியமனம்!

நூருல் ஹுதா உமர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக சாய்ந்தமருதை சேர்ந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல்கள் மறுசீரமைப்பு சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதற்காக மேற்படி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அல்ஹாஜ் ஏ.எல்.எம். சலீம் கடந்த காலங்களில் இலங்கை பொது சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும், அமைச்சுக்களின் மேலதிக செயலாளராகவும் பதவி […]

நோர்வூட்டில் “No” மதுபானசாலை! மக்கள் போராட்டம், தடுக்குமா அதிகாரம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை  – ஒட்டரி  பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18.10.2023) போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய், வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் என கோஷங்களை எழுப்பியவாறு ஒட்டரி பகுதியில் இருந்து டிக்கோயா நகர்வரை மக்கள் பேரணியாக வந்தனர். ” மலையகம் தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றது. எமது சமூகமாற்றத்துக்கு இந்த மதுபானசாலைகள் பெரும் […]

பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் முடிவு

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி மாற்றங்களை செய்தார். டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றினார். தற்போது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பயனர்களிடம் சந்தா வசூலிக்கும் நடைமுறையை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதாகவும், அடிப்படை அம்சங்களுக்கு ஒரு டாலர் (இந்திய மதிப்பில் ரூ.83) […]

உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் திட்டம்

உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் தி பெல்ட் அண்ட் ரோடு திட்டமானது கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் சாலை மற்றும் கடல் வழியாக மற்ற நாடுகளை தன்னுடன் இணைப்பதே சீனாவின் நோக்கம் ஆகும். மேலும் இந்த திட்டத்தினை ஏற்றுக்கொண்ட நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா ஏற்படுத்தி கொடுக்கிறது. அதன்படி சாலை அமைத்தல், கட்டுமானம், துறைமுக சீரமைப்பு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் முடிவடையாமல் கல்வி, சுகாதாரம், ரெயில்வே போன்ற துறைகளில் சீனா கோடிக்கணக்கில் முதலீட்டையும் […]

பிரித்தானியாவில் இனி சிறை செல்லத் தேவையில்லை

பிரித்தானியாவில் 12 மாதங்களுக்கும் குறைவாக சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இனி சிறை செல்லத் தேவையில்லை என்ற சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியா சிறைச்சாலைகளில் காணப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அங்கு சுமார் 88,225 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களுக்காக, மக்களுடைய வரிப்பணம் ஆண்டொன்றிற்கு 47,000 பவுண்டுகள் செலவிடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , சிறைகள் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக, நீதித்துறைச் செயலரான அலெக்ஸ் சால்க் சில புதிய திட்டங்களை […]

இஸ்ரேல் நிவாரணப் பொருள்கள் அனுமதிப்படவில்லை என்றால் ….?

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் கடந்த 7 ஆம்திகதி ஆரம்பித்த நிலையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட காஸா வட்டாரத்திற்குள் நிவாரணப் பொருள்களை அனுமதிக்குமாறு மனிதாபிமான அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. காஸாவில் தண்ணீர், உணவு, எரிபொருள் ஆகியவை தீர்ந்துவரும் நிலையில் மில்லியன் கணக்கானோரைக் காப்பாற்ற நேரம் குறைந்து வருவதாக மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்தன. இஸ்ரேல் அனுமதிக்காக காஸாவுடனான எகிப்தின் எல்லையில் நிவாரணப் பொருள்களுடன் பல லாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் நிவாரணப் பொருள்களைக் […]

மட்டு மாநகரில் அமையவுள்ள நவீன நூலகத்திற்கான திட்டசெயல்படுத்தல் குழு நியமனம்.

  மட்டக்களப்பு மாநகரத்தில் அமையவுள்ள மாபெரும் நவீன நூலகத்திற்கான புத்தகங்கள், ஆவண பதிவேடுகள், ஏட்டுச் சுவடிகள், பண்பாட்டு மரபுரிமை சாதனங்கள் போன்றவற்றையும் ஏனைய முக்கிய தேவையான விடயங்களையும் தேடி சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்கான திட்ட செயல்படுத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் தற்போதய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சருமான  சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக செயல்பட்ட போது அரசியல், இனம், மதம், மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்தித்து எமது மாகாணத்தில் விசேடமாக […]