பங்களாதேஷ் ரயில் விபத்து

பங்களாதேஷ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்துடன் ரயில் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்க படையினர் எவரேனும் தாக்கப்பட்டால்….?

ஹமாஸ் இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்க படையினர் எவரேனும் தாக்கப்பட்டால் அமெரிக்கா திருப்பி தாக்குவதற்கு தயார் என அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். என்பிசியின் மீட் த பிரசில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள பிளிங்கென், ஈரான் ஆதரவு சக்திகளால் மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மோதலின் போது அமெரிக்க படையினர் இலக்கு வைக்கப்பட்டால் அதற்கான பதில் நடவடிக்கையில் ஈடுபட பைடன் நிர்வாகம் தயாராகவுள்ளது எனவும் […]

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு கொழும்பில்

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு அடுத்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டின் போது பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள சாத்தியமான தாக்கம் பற்றியும் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, மறுசீரமைப்பு மூலம் ஏற்படும் மாற்றம், மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அபிவிருத்தி செய்வதில் தொழிலாளர்களின் பங்கு என்பன அமர்வின் மையமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அலுமினிய கம்பிகளை வெளியேற்றும் சமயத்தில் உயர் வெப்பநிலை காரணமாக பாய்லர் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேருக்கு […]

காசாவின் மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள்

காசாவின் மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காசாவில் உள்ள பெரும் மருத்துவமனையான அல்ஷிபா அல்குட்ஸ் இந்தோனேசிய மருத்துவமனை போன்றவற்றிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக பாலஸ்தீன ஊடகங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்குட்ஸ் மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேலின் விமானதாக்குதல்கள் இடம்பெற்றதை காண்பிக்கும் வீடியோவொன்றை ஹமாஸ் டெலிகிராமில் வெளியிட்டுள்ளது. தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் ஹமாஸ் வெளியிட்டுள்ளது.அந்த கட்டிடம் குவைத் மருத்துவமனைக்கு அருகில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.  

ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் எச்சரிக்கை

லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது. இந்த முயற்சி லெபனானுக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திக்கும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும். இந்த போர் இஸ்ரேலுக்கு வாழ்வா? சாவா? போன்றது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் சந்தித்தார். […]

காசா பகுதியில் தாக்குதல்கள் தீவிரம்

வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக் குழுக்கள் காசா பகுதிக்கு அருகில் குவிந்துள்ளன, ஒரு கட்டத்தில் காசா பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும் என்று போர் விமர்சகர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுமார் மூன்று மில்லியன் […]

பிரித்தானியாவில் புயலில் சிக்கிய விமானம்

பிரித்தானியாவை ஏற்பட்ட புயலில் சிக்கிய விமானம் ஒன்று, தரையிறங்கும்போது, ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கியுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானியாவை ‘Babet’ என்னும் புயல் துவம்சம் செய்துவருகிறது. புயலுக்கு மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சுமார் 4,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதையும், சில இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடப்பதையும் காட்டி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிரீஸ் தீவுகளில் […]

பசுபிக் கடல் பகுதியில் கரை ஒதுங்கியிருக்கும் விசித்திர உயிரினம்

தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” என அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், […]

மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் – உலகநாடுகள்

கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கபப்ட்ட ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் இன்னும் முடிவுக்குவராத நிலையில் உலகநாடுகள் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்குள் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிபட்ட இரு அமெரிக்கர்களான, தாயையும் மகளையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கிபுட்ஸ் நகல் ஒஸ்ஸில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் போது பிடிபட்ட ஜூடித் நட்டாலியா ரானன் இருவரையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. […]