நோர்வூட்டில் “No” மதுபானசாலை! மக்கள் போராட்டம், தடுக்குமா அதிகாரம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை  – ஒட்டரி  பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18.10.2023) போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய், வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் என கோஷங்களை எழுப்பியவாறு ஒட்டரி பகுதியில் இருந்து டிக்கோயா நகர்வரை மக்கள் பேரணியாக வந்தனர். ” மலையகம் தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றது. எமது சமூகமாற்றத்துக்கு இந்த மதுபானசாலைகள் பெரும் […]

மட்டு மாநகரில் அமையவுள்ள நவீன நூலகத்திற்கான திட்டசெயல்படுத்தல் குழு நியமனம்.

  மட்டக்களப்பு மாநகரத்தில் அமையவுள்ள மாபெரும் நவீன நூலகத்திற்கான புத்தகங்கள், ஆவண பதிவேடுகள், ஏட்டுச் சுவடிகள், பண்பாட்டு மரபுரிமை சாதனங்கள் போன்றவற்றையும் ஏனைய முக்கிய தேவையான விடயங்களையும் தேடி சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்கான திட்ட செயல்படுத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் தற்போதய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சருமான  சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக செயல்பட்ட போது அரசியல், இனம், மதம், மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்தித்து எமது மாகாணத்தில் விசேடமாக […]

கொத்மலையில் நிலத்துக்கு அடியே சத்தம்! மக்கள் அச்சம்!

   ( நூரளை பி.எஸ். சுப்பிரமணியம்) நுவரெலயா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து நீர் செல்வது போலும் பல்வேறு விதமான அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதாக கிராம மக்கள் அளித்துள்ள தகவலுக்கு அமைய நேற்று  ( 15) ஞாயிற்றுக்கிழமை முதல் அக்கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களை இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் தொடர்பாக கருத்து […]

ஹட்டன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    (க.கிஷாந்தன்) ஹட்டன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16.09.2023) கையளிக்கப்பட்டது.   இந்த கையளிப்பு நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பிரத்யேக செயலாளர் நவரட்ணம், இணைப்பு செயலாளர் ஜெய பிரமதாஸ், அட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர், அட்டன் […]

மன்னார் தென் கடலில் அதிகளவில் ஆமைகள் மரணம்!

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் தென் கடற் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்து வருகின்றனர். வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகையும் தந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென் கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாகவும் அத்துடன் அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார் சிலாவத்துறை பகுதி கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும் சிலாவத்துறை […]

ஹப்புத்தளை – தியாத்தலாவைதில் ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து தாமதம்!

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று 10.15 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதமே தடம் புரண்டதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திலும், கண்டியில் இருந்து […]

தேர்தல் காலத்தில் மட்டும் வரும் போலிகளை நம்ப முடியாது. – எம்.ராமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) ” மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர் என ஒருவர் (முத்தையா முரளிதரன்) கூறியுள்ளார். அவரை வரவேண்டாம் என சொன்னது யார்? மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள், நாங்களே மாலைபோட்டு வரவேற்பளிக்கின்றோம்.” – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். ஆனால் தேர்தல் காலத்தில் வாக்குக்காக மட்டும் தானே எவரையாவது அழைத்துக்கொண்டு வருகின்றீர்கள், தேர்தல் முடிந்ததும் எங்களையும் கஷ்டத்தில் தள்ளிவிட்டு, காணாமல் போய் விடுகின்றீர்கள் எனவும் அவர் கூறினார். […]

காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

  யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் மூலம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட இரண்டு கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பொதுவான இறங்குதுறை மற்றும் மீன் சந்தை போன்ற பொதுவானதாக இருந்து வருகின்ற நிலையில் வற்றை பகிர்ந்து கொள்வது தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டினையே கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார். குறித்த விவகாரம் அமைச்சரின் கவன்திற்கு […]

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இலங்கையர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர். ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த முயற்சித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டர். இவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்துமடு விவகாரம்; உடனடியாக தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு !

நூருல் ஹுதா உமர் மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர், ஆளுங்கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், மகாவலி பணிப்பாளர் , பொலிஸ்மா அதிபர் மற்றும் வனவிலங்கு […]