LPL2023 கிண்ணத்தின் இறுதி போட்டிக்கு தம்புளளை அணி தகுதி! யாழ்ற்கு இம்முறை வாய்ப்பில்லை !

LPL2023  கிண்ணத்திற்கான இறுதி போட்டியில் விளையாடும் தகுதியை தம்புள்ளை ஆயோரா அணி பெற்று இருக்கிறது. இன்று  காலி டைட்டன்ஸ் அணிக்கெதிராக களமிறங்கிய தம்புள்ளை அணி  நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதுடன் முதலில் காலி அணியை ஆட சொன்னது. காலி அணி தனது 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை மட்டுமௌ பெற்றது.இதிலு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லசித் குரோசபுள்ளே சிறப்பாக ஆடினார் . அவர் 80 ஓட்டங்கள், பந்து வீச்சில் ஹேய்டன் கீர். மூன்று விக்கெட்டுகளையும் நூர் இரண்டு […]

வவுனியாவில் இரு மாணவர்கள் நீர்க்குழியில் விழுந்து பலி

அஸ்ரப் அலீ வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இரண்டாவது தினமான நேற்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்நிரம்பிய குழியொன்றுக்குள் […]

ஹோமாகம தொழிற்பேட்டையில் பாரிய தீவிபத்து! தீயணைப்பு படை களத்தில்

அஸ்ரப் அலீ ஹோமாகம தொழிற்பேட்டையில் இன்று முன்னிரவு தொடக்கம் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது இதனையடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடாக ஹோமாகம மற்றும் கட்டுவனை பிரதேசங்களுக்கு வௌியார் வருகை தருவதைத் தவிர்க்குமாறும் பிரதேசத்தில் வசிப்பவர்கள் முகமூடி அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் குறித்த பிரதேசங்களில் இருக்கும் குடிநீர்க் கிணறுகளை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

நாட்டின் ஸ்தீரனமான செயற்பாடுகள் குறித்து தூதுவர்களுக்கு அமைச்சர் அலிசப்ரி விளக்கம்

நூருல் ஹுதா உமர் கொழும்பில் உள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளுக்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கமளிக்கும்; நிகழ்வு இன்று காலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களின் கலந்து விளக்கமளித்த இந் நிகழ்வில் கீழ்வரும் செயற்பாடுகள் விளக்காட்சிகள் மூலம் விரிவாக தெளிவாக்கப்பட்டன: 1. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கண்டுள்ள முன்னேற்றங்களும் அவற்றை கண்டறிவதில் அண்மையில் […]

சந்தானம் நடிக்கும் ” கிக்” செப்டம்பர் 1 உலகம் முழுவதும்

சந்தானம் நடித்த DD ரிட்டன்ஸ் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்த படமான “கிக்” படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் சந்தானத்து இரண்டு கதைநாயகிகள் தன்யா ஹோப் மற்றும் ராகினி திவேதி படம் எதிர்வரும் செப்டம்பர் 1 வெளியாகிறது. பார்டியூன் பிலிம்ஸ் நவின் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தின் இசை அர்ஜூன் ஜனயா

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானம்!

  குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நாளைய தினம் (18) குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை ஊடகவியாலளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். இதன்போது ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை […]

பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே இருக்கவேண்டும்!, தமது நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர் நசீர் அஹமட்

  சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பொலிஸ் அதிகாரங்களும் பிரத்தியேகமாக மத்திய அரசாங்கத்திடம்  மாத்திரமே ஒப்படைக்கப்பட வேண்டும் என சுற்றாடல் அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான  நசீர் அஹமட், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக  கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் பொலிஸ் அதிகாரம் உட்பட பல விடயங்களை விளக்கியிருக்கிறார். குறிப்பாக இலங்கைவாழ் முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களின் பங்கேற்பின்றி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை  அமுல்படுத்துவதன்  மூலமோ அல்லது வேறு […]

நுவரெலியாவில் ஏணி நூல் வெளியீட்டு நிகழ்வு

  டி சந்ரு திவாகரன் மலையக ஆசிரியர் முன்னணியின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமை பரீட்சை மாணவர்களுக்கான வழிகாட்டி நூலாக ஏணி நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது கல்வி இராஜாங்க அமைச்சின் முழுமையான அனுசரணையுடன் நுவரெலியா வலயத்தின் கீழ் இயங்கும் கோட்டம் ஒன்று இரண்டு மூன்றுக்குட்பட்ட சுமார் 900 மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டியான ஏணி நூல் வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த […]

தனியார் வைத்தியசாலைகளில் திடீர் சோதனை!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற தனியார் வைத்தியசாலைகளில் எழுமாறான பரிசோதனைகளை மேற்கொண்டன. மருந்துகளின் விலை, காலாவதித் திகதி, மயக்க மருந்துகளின் பாவனை, களஞ்சியப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் நீண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன குறித்த விஜயத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் […]

அன்னமலை வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயம்!

நூருல் ஹுதா உமர் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP திட்டத்திற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அன்னமலை வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ. எல்.எம் றிபாஸ், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். சி. எம். மாஹிர் ஆகியோர் விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் […]