யால வன பூங்காவிற்கு அமெரிக்க தூதுவருடன் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார்.இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்களும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார். யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார்.இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார். யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான […]
நியூசிலாந்தை வீழ்த்திய எமிரேட்ஸ் அணி! சரித்திரம் படைப்பு!

நியூஸிலாந்து அணிக்கெதிராக இன்று நடைப்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் அணி 7. விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது இதன்படி 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன இறுதி போட்டி ஞாயிறு இடம்பெறும். டெஸ்ட் அந்த பெறாத அணியான ஐக்கிய அரேபிய ஏமிரேட்ஸ் அணியிடம் இன்று பெற்ற தோல்வி நியூஸிலாந்து அணிக்கு சரித்திர தோல்வியாகும் Captain leads from the front!SENSATIONAL 55 off 29 (Four 4️⃣s Three 6️⃣s) gives UAE […]
அம்பாறை மாவட்ட ஊடக போரத்தின் 6 வது மாநாடு அக்கரைப்பறறில் நாளை! நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுமா?

(இப்னுஷெரீப்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் 06 ஆவது வருடாந்த மாநாடு நாளை(20) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது. போரத்தின் தலைவர் கலாபூசனம் எம்.ஏ.பகுர்டீன் தலைமியில் அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேசப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இம்மாநாடு மூன்று அமர்வுகளைக் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.ஹனீபா தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் போரத்தின் மாநாட்டில் நடப்பு ஆண்டுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவும் இடம்பெறவுள்ளதால் அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு […]
யாழில் கோர விபத்து! கணவன் மரணம் , மனைவி படுகாயம்! செல்போன் பேசி சாரதி வாகனம் ஓட்டியதாக மக்கள் புகார்!

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மரைவி படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்களிலும் பொலிஸாரின் தண்ணீர் பவுஸராட் நேருக்நேர் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் தமத் கணவருடன் A9 வீதியில் வந்த போது தண்ணீர் பௌசருடன் மோதியதாகவும் கணவர் அந்த இடத்திலேயே பரணமானதாக உயிரழந்தவரின் மனைவியின் உறவினர்கள் கூறிய்ள்ளார். அவரும் படுகாயமடைந்து இருப்பதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கோண்டு சென்றதாக பொலிவார் கூறினர். ஏ9 […]
பலாங்கொடை ஓப்பநாயக்கவில் லொறி – ஜீப் மோதல் ! 6 பேர் காயம்!! !

பலாங்கொடை ஓப்பநாயக்க உடவல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் காயமைடந்தனர். இவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் இருந்து எஹலியகொடை பிரதேசத்திற்கு சென்ற டிபென்டர் ஜீப் ஒன்றும் உடவலவ பிரதேசத்தைச் சேர்ந்த மணல் ஏற்றிச் வந்த லொறியும் ஒன்றுக்கொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிபென்டரில் பயணித்த பெண் ஒருவர் உட்பட 5 பேரும் லொறியின் சாரதியும் உட்பட 6 பேருமே காயமடைந்தவர்கள் . […]
அரசியல் சூதாட்டங்கள் வேண்டாம்நேர்மையுடன் நாட்டைக் கட்டியெழுப்புவோம்- சஜித்

நலீர் அகமட் இத்தருணத்தில்,நமது நாட்டில் ஒரு பயங்கரமான பொருளாதார மற்றும் சமூக அழிவு நடைபெற்று வருவதாகவும், இந்நேரத்தில் கிட்டத்தட்ட 60000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை இழந்துள்ளனர் என்றும்,வறட்சியின் காரணமாக இலட்சக்கணக்கான ஹெக்டயர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும், விவசாயிகள் உட்பட ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட 5,000 பாடசாலை ஆசிரியர்களும் ஏராளமான மருத்துவ நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும்,இதனால், மருத்துவமனைகளின் வார்ட் தொகுதிகள் மூடப்பட்டு அறுவைச்சிகிச்சைகள் கூட இரத்து […]
தமிழியல் மாநாட்டில் மன்னாரை சேர்ந்த 02 அண்ணாவியர் மதிப்பளிப்பு

( வாஸ் கூஞ்ஞ) யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையினரால் கடந்த ஆவணி (7-8) திகதிகளில் நடாத்தப்பட்ட நான்காவது அனைத்துலக தமிழியல் மாநாடு வழங்கும் நிகழ்வில் நாடு முழுவதும் கலைப் பணி ஆற்றி வரும் பத்து அண்ணாவியர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள் இதில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வசிக்கும் செபஸ்தியான் மாசிலாமணி மற்றும் வங்காலையில் வசிக்கும் சீமான் பத்திநாதன் பர்னாந்து ஆகிய இருவரும் மதிப்பளிக்கப்பட்டார்கள் மேலும் செபஸ்தியான் மாசிலாமணி(பிலேந்திரன் ) அவர்கள் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள […]
இணைந்த கரங்கள் அமைப்பினால் வீரச்சோலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !!

நூருல் ஹுதா உமர் கமு/சது/வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (85) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை, பாதணி என்பன வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் அந்தோனி சுதர்சன் தலைமையில் இன்றைய தினம் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் அமைப்பு உறவுகளின் நிதி பங்களிப்பு மற்றும் மில்ரோகித் ராஜ்குமார் அவர்களின் நிதி பங்களிப்புடன் இம் மாணவகளுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் […]
ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு…..?

ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளை கனேடிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வயது மூப்புடன் ஏற்படக்கூடிய ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும் என்பது குறித்து கனேடிய ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றைய மேற்கொண்டுள்ளனர். இதன்போது உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின் ஊடாக ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் அல்லது ஞாபக மறதி ஏற்படுவதனை தாமதப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோவின் லண்டனில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வாளர் மொன்டிரோ ஒடாஸோ தலைமையிலான […]
தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை- இம்ரான் கானின் மனைவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, சிறையில் உள்ள தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். அட்டாக் சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என கூறி உள்ளார். இது குறித்து புஷ்ரா பீபி பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:- […]