அஞ்சலோவின் நிதான ஆட்டம் ! LPL கிண்ணம் கண்டி வசம்! ரசிகர்கள் பரவசம்!!

LPL2023  T20 கிண்ணத்தின் இறுதி போட்டி இன்று கொழும்பு  R பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்றது தம்புள்ள அரோரா – பி லவ் கண்டி அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தம்புள்ள அரோரா முதலில் துடுப்பெடுத்தாடியது. தனது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது இதில் தனஞ்ஜெய டி சில்வா. 49 ஓட்டங்கள், சதிர சமரவிக்ரம 36 ஓட்டங்கள் , குசல் பெரேரரா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்கள்.. வெற்றி இலக்கான 148 […]

ஜீவன் பின்னால் திரண்டது இளைஞர் படை! மிரண்டது நிர்வாகம் ! மாத்தளை ரத்வத்தை பிரச்சினை தீர்வு!

மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது. அத்துடன், குறித்த உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுக்கவும் நிர்வாகம் இணங்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தோட்ட மக்களிடம் பகிரங்கமாக நிர்வாக தரப்பினர் மன்னிப்பு கோரியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் கூறி இருக்கிறார். […]

மக்கள் வெள்ளத்தில் ” மலையகம் 200′ வரலாறு நூல் அறிமுக விழா!

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் கலாபூசணம் இரா சுப்பிரமணியம் எழுதி வெளியிட்ட மலையகத் தமிழர்களின் இருநூறு வருட வரலாறு என்ற நூல் அறிமுக விழா  இன்று( 20 – 8-2023)  நடைபெற்றது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சிறப்புரை ஆற்றினார் விழாவினை திரு யோ புரட்சி தொகுத்து வழங்கினார் திருமதி சிவகுமார் திலகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார் கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் திரு பெருமாள் கணேசன் நூல் ஆய்வு […]

அம்பாறை மாவட்ட ஊடக போரத்தின் நிர்வாகத்தில் மாற்றம்! ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு!

(இப்னு ஷெரீப்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஆறாவது மாநாடும் ஊடகவியலாளர் கௌரவிப்பைம் போரத்தின் தலைவர் கலாபூசனம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில்இன்று (20) அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேச பாடசாலை கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்ரசிறி பிரதம அதிதியாகவும், தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கே.குணராசா சிறப்பு அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறைத  பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் கௌரவ […]

சுகார அமைச்சர் கெஹலியவிற்கு எதிராக கையெழுத்து வேட்டை!

(  நூரளை பி.எஸ். மணியம்) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்லவுக்கு எதிராக பத்து இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் பொதுமக்களிடம் கையொப்பம் சேகரிக்கும்  நிகழ்வு நேற்று  சனிக்கிழமை   (19) தலவாக்கலை லிந்துலை பிராந்திய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபால தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் பெருந்தோட்ட   தொழிலாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

மலையக மக்களின் பொறுமையை சோதிக்காதீங்க! திகா எச்சரிக்கை

  மலையக மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார் மாத்தளை எல்கடுவ ரத்துவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மலையக மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அவர்கள் அமைதி காக்கின்றார்கள் என்பதற்காக கையாளாதவர்களாக தோட்ட நிர்வாகங்கள் கருதி விடக்கூடாது அவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்தால் தோட்ட நிர்வாகங்கள் தோட்டத்தை விட்டு செல்ல […]

எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கட்சியின் முக்கியஸ்தர்களுடன் செயலாளர் ஜீவன் பேச்சு !

  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியற் செயற்பாடுகள் குறித்த விசேட கூட்டமொன்று  இன்று இடம்பெற்றுள்ளது. காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சரூமான ஜீவன் தொண்டமான் தலலமையில் இந்த கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கட்சியின் எதிர்கால செயற்த்திட்டங்கள் தொடர்பாக கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் எனது தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர்கள், தலைவிமார்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் என்னுடன், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், திருமதி.அனுஷியா சிவராஜா, பிரதி […]

மாளிகைக்காடு ஹுசைன் வித்தியாலய “முத்தாய்ப்பான முத்து” விழாவின் ஆரம்பம்!”டீ” வெளியீடு

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், பாடசாலையின் முதல் ஆசிரியரும், இரண்டாவது அதிபருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். ஏ. நழீர் அவர்களின் ஓய்வை முன்னிட்டும் பாடசாலை பழைய மாணவர்கள் செயற்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள “முத்தாய்ப்பான முத்து” விழாவின் முதல் கட்ட டீ சேர்ட் அறிமுக விழா இன்று (20) பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை பழைய மாணவர்கள் செயற்குழு செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் […]

பொறுத்தது போதும் திருப்பி அடியுங்கள் ! மாத்தளை ரத்வத்தை விவகாரம் -மனோ ஆத்திரம் !

திருப்பி அடியுங்கள். அது சட்ட வரம்புக்கு உட்பட்டதே! நான் பகிரங்கமாக இந்த கூற்றுக்கு பொறுப்பேற்கிறேன்! -பெருந்தோட்ட மக்களுக்கு மனோ கணேசன் தெரிவித்துள்ளார் வன்முறைக்கு எதிராக, தற்காப்புக்காக, திருப்பி தாக்க முடியும். அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயத்தில் நடைபெற்ற, மலையகம்-200 நூல் வெளியீட்டு விழாவில் மாத்தளை மாவட்ட ரத்வத்தை […]

செல் போன் செய்த வினை! கொட்டகலையில் ரயில் மோதி 17 வயது இளம் பெண் மரணம்!!

கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு புகையிர பாதையில் பயணித்த யுவதி ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹட்டன் குடாகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் மேகா என்ற இளம் பெண்ணே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதி, ஹட்டன் கொட்டகலை நகருக்கு சென்று மீண்டும் புகையிரத பாதையில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீடு திரும்பிய போது ஹட்டனுக்கும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்குமிடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையில் இருந்து கொழும்பு […]