2023ம் ஆண்டில் மிக மோசமான விமான சேவை …….

எயார் கனடா விமான சேவை நிறுவனம் மிக மோசமான நேர முகாமைத்துவத்தைக் கொண்ட விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடுகளில் இயங்கி வரும் பத்து பெரிய விமான சேவை நிறுவனங்களில் எயார் கனடா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டில் மிக மோசமானது என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் 63 வீதமான விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

பிழையாக அவசர அழைப்பு சேவையை பயன்படுத்துவோருக்கு அபராதம்

ஒன்றாரியோ மகாணத்தின் பிரம்ரன் நகரில் பொலிஸ் அவசர அழைப்பு சேவைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 911 என்னும் அவசர அழைப்பு சேவையை பிழையாக பயன்படுத்துவோர் தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பிரம்ரன் நகர மேயர் பெட்ரிக்; பிறவுண் எச்சரித்துள்ளார்.

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் குறித்து – இந்திய வெளியுறவு அமைச்சர்

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இந்திய வெளியுறவு அமைச்சர் தமது கருத்தை முன்வைத்துள்ளார். கனடா அரசியல், காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளித்துள்ளது என்றும், கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். இப்படி அரசியலில் காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதுதான் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட காரணம் என தான் கருதுவதாக தெரிவித்த அமைச்சர், அதனால் இந்தியாவுக்கும் பயனில்லை, கனடாவுக்கும் பயனில்லை, துரதிர்ஷ்டவசமாக, […]

என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார்- கவிஞர் வைரமுத்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல் செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர். உள்ளொன்று வைத்துப் புறவைத்துப்புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம். எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார் திரையில் நல்லவர் ; அரசியலில் வல்லவர் சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர் கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் […]

நடிகர் விஜயகாந்த் காலமானார்

பிரபல நடிகரும், தேமுதிகவின் நிறுவுனருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் […]

ரொறன்ரோவில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு

ரொறன்ரோவில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. காசா போர் தொடங்கியது முதல் இதுவரையில் ரொறன்ரோவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரோத உணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஓராண்டு காலப் பகுதியில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் இந்தக் காலப் பகுதியில் 48 சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ரொறன்ரோவில் இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் பதிவான மிக அதிகளவான சனத்தொகை வளர்ச்சி….

கனடிய மொத்த சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் கனடாவின் சனத்தொகையானது 430000ஆல் அதிகரித்துள்ளது. தற்காலிக அடிப்படையிலான வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோரின் வருகையின் காரணமாக சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளது. சுமார் 66 ஆண்டுகளின் பின்னர் ஒரு காலாண்டில் கனடாவில் பதிவான மிக அதிகளவான சனத்தொகை வளர்ச்சி இந்த ஆண்டின், மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ளது. கடந்த […]

அமெரிக்ககூட்டுப் பாதுகாப்பு படையில் – கனடா

ஹுதி போராளிகளின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் செங்கடலில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு படையில் கனடாவும் இணைந்து கொண்டுள்ளது. செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையணியினால் இந்த பாதுகாப்பு பணி முன்னெடுக்கப்பட உள்ளது. செங்கடலில் பரப்பில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இந்த பாதுகாப்பு படையணியை உருவாக்கியுள்ளன. யேமனில் இயங்கி வரும் ஹுதி போராளிகள் செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். ஹுதி போராளிகளின் அச்சுறுத்தல்களை […]

கனடியப் பிரஜைகள் அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்

கனடாவில் யூத எதிர்ப்பு நடவடிக்கைள் குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அச்சம் வெளியிட்டுள்ளார். அண்மையில் கனடாவின் ஒட்டாவாவ நகரில் 15 வயதான சிறுவனை பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். யூத சமூகத்தின் மீது தாக்குதல் நடத்த குறித்த சிறுவன் முயற்சித்தாக கனடிய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சிறுவன் மீது வெடிபொருட்கள் தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகின் ஏனைய பகுதிகளில் போன்றே கனடாவிலும் […]

சில நாடுகளுக்குச் செல்லவேண்டாம் – கனடா அரசு

விடுமுறை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், கனேடியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு ஆவலாக காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக, கனடா அரசு சில பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. சில நாடுகளில் குற்றச்செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல், அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக, அங்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு கனடா அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி, பயணிக்கவேண்டாம் என கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ள 21 நாடுகள் பட்டியலில் ரஷ்யா, உக்ரைன், ஏமன், சூடான், சிரியா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் அடங்கும். தேவைப்பட்டாலொழிய […]