டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்

டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெப்பநிலை கடுங்குளிரை உணரச் செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வெப்பநிலை மறை 5.6 செல்சியஸ் பாகையாக காணப்பட்டது. கடந்த 20 ஆம் திகதியும் இதே விதமாக மறை 5.6 செல்சியஸ் பாகை அளவில் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்தக் காலப்பகுதியில் அதிக கூடிய வெப்பநிலையாக 4.3 பாகை செல்சியஸாக அமையும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை தொடர்பான குறிகாட்டிகளில் […]

ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்

ரொறன்ரோவில் இயங்கி வந்த தடுப்பூசி நிலையங்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் நான்கு இடங்களில் இவ்வாறு கோவிட்19 தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாகாண அரசாங்கம் வழங்கி வந்த நிதியுதவிகள் நிறைவு பெறுவதாகவும் இதனால் குறித்த தடுப்பூசி நிலையங்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நோர்த் யோர்க் சிவிக் சென்டர், கொல்வர்டேல் மோல், மெற்றோ ஹால் மற்றும் ஸ்காப்றோ தடுப்பூ நிலையம் என்பன நிரந்தரமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச் சுகாதார நிறுவனம் பெரும் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை […]

ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்

ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்19 தொற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் கழிவு நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் கோவிட் பரவுதல் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஒரு ஆண்டு காலமாக மாகாணத்தில் இல்லாத அளவிற்கு தற்பொழுது கோவிட் பரவுகை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத கால இடைவெளியில் கழிவு நீரில் கோவிட் தொற்று குறித்த குறிகாட்டிகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.

கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்

கனடாவில் பெருந்தொகை நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் ரெக்ஸ்டேல் பகுதியில் அண்மையில் இவ்வாறு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. சுமார் மூன்று லட்சம் டாலர்கள் பெறுமதியான ஆபரணங்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்பியோன் மற்றும் 27ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகாமையில் இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கனடியர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் கனடியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது கனடிய மக்களின் உளச் சுகாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண வீக்கமானது பொருளாதார ரீதியில் மட்டுமின்றி மக்களின் உளவியல் ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எம்என்பி என்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. பண வீக்கம் காரணமாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியே […]

இருதய நோய் போன்ற காரணிகளால் அதிகளவான கனடியர்கள் உயிரிழப்பு

கனடாவில் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் கனடியர் ஒருவரின் ஆயுட்காலம் 82.3 வருடங்கள் எனவும், தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் இந்த ஆயுட்காலம் ஆனது 81.3 வயதாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவு ஆயுட்காலம் குறைவடைந்த பகுதியாக சஸ்கட்ச்வான் பதிவாகியுள்ளது. புற்றுநோய் இருதய நோய் போன்ற காரணிகளால் அதிகளவான கனடியர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

ரொறன்ரோ பகுதியில் கோர விபத்து ஐந்து பேர் பலி

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கோபமான மக்கள் வாழும் அல்பர்ட்டா மாகாணம்

அல்பர்ட்டா மாகாணம் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கனடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வீடமைப்பு, பணவீக்கம் மற்றும் அரசியல் போன்ற விடயங்களில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிக கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கனடா மார்க்கம் பகுதியில் செம்மண் இரவு நிகழ்ச்சி

கனடா மார்க்கம் பகுதியில் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி செம்மண் இரவு 2023 நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவுள்ளது. புலம்பெயர் தமிழர் பங்கேற்புடன் செம்மண் இரவு நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. எமது புலம்பெயர் சிறுவர்கள் மற்றும் கலைஞர்களும் தமது கலைத்திறமையினை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குளிகால செம்மண் இரவு நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.      

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கு பரிசு

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Port Moody என்னுமிடத்தில் வாழும் Shannon Von Richter, Karsten தம்பதியருக்கு, தங்கள் நகரத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக தகவல் கிடைக்க, ஆச்சரியமடைந்துள்ளார்கள். ஆனால், அந்த இரண்டு பரிசுமே அவர்களுக்குத்தான் என்பதை முதலில் அவர்கள் அறியவில்லை. தம்பதியர் தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகள் வாங்க, இரண்டு […]