மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்?

ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ். இவர் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் இன்று திறக்க ஜஹர்சுஹுடா மாவட்டம் பிரஜாராஜ்நகரின் காந்தி சவுக் பகுதிக்கு வந்தார். மதியம் 12.30 மணிக்கு அப்பகுதிக்கு வந்த மந்திரி நபா தாஸ் காரில் இருந்து கிழே இறங்கினார். அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரை விட்டு கீழே இறங்கிய உடன் அவர் மீது […]

திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுவை பொறுத்தவரை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், இரு அணிகளும் தேர்தல் பணிக்குழுவை அறிவித்து தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் இருதரப்பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் […]

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமைக்கு ஏதுவான காரணிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக கடமையாற்றிய காலத்தில் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாது, தற்பொழுது நடைமுறைப்படுத்த எத்தனிப்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக வழங்குவது தொடர்பில் ஆழமாக ஆய்வு 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக வழங்குவது தொடர்பில் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். ஜே.ஆர். […]

2,000 டெங்கு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்ககூடிய சாத்தியக்கூறுகள்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா நாட்டில் டெங்கு நோயாளிகளின் தொகை அதிகரித்து வருவதாகதெரிவித்துள்ளார். வடக்கில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் நேற்றைய தினம் (28.01.2023) கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021 ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக காணப்படுகின்றது. அதேபோன்று யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2023 ஆம் ஆண்டு […]

மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து அட்டனில் 1000ற்கும் மேற்பட்டோர் ஊர்வலம்n

இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை, கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்ட பாரிய ஊர்வலம் ஒன்று இன்று (29) திகதி நடைபெற்றது. குறித்த ஊர்வலம் அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்து அட்டன் நகர் ஊடாக அட்டன் டி.கே.டப்ளியு, கலாசார மண்டபத்தினை சென்றடைந்தது. குறித்த ஊர்வலத்தில் மலையகத்தை […]

Imf

தற்போதுள்ள வரிகளை விடவும் அதிக வரிகளை விதிக்குமாறு IMF ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் மக்கள் மக்கள் பக்கம் இருந்து அவர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். பொருளாதாரம் மீண்ட பின்னர் அரச ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகளை வழங்க  எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இந்தியாவுடனும்;, சீனாவுடனும் பேசவுள்ளதாகவும் ஜனாதிபதி நேற்று நடைபெற்ற நிகழ்வில்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டம் இனி அம்ரித் உதயன்

ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இந்த தோட்டம் முகலாய தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள ‘முகலாய’ தோட்டத்தை ‘அம்ரித் உதயன்’ என்று பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு நாடு சுந்திரமடைந்து […]

மறைந்த சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ

தென்னிந்திய திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்தவர் ஜூடோ ரத்தினம். 92 வயதான ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேல் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினம், 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். மறைந்த சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினத்தின் உடல், அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் இன்று நல்லடக்கம் […]

பதவியில் இருந்து விலகுமாறு கொலை மிரட்டல்….

நேற்றிரவு தொலைபேசி மூலம் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான எம்.எம்.மொஹமட்டை பதவியில் இருந்து விலகுமாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இதற்கு முன்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான எஸ்.பி.திவாரத்னவுக்கு குறுஞ் செய்தி மூலம் மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கே.பீ.பீ.பத்திரன மற்றும் திவாரத்ன ஆகிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை […]

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதி

நாட்டின் அரசியலமைப்பை சகோதரனுக்காக மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இடம்பிடித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சர்கள் தோல்வியடைவதற்கு குடும்ப ஆட்சி பிரதான காரணமாக அமைந்தது,ஆகவே 2019ஆம் ஆண்டுக்கு பிறகு பாடம் […]