A.லோரன்ஸ்  காலமானார் – கொட்டகலை கமர்சியல் மயானத்தில் நல்லடக்கம்

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் A.லோரன்ஸ்  தனது 71 ஆவது வயதில் காலமானார். பேராதனை போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்னார் காலமானார். 1952 ஆம் ஆண்டு பிறந்த அவர்  தமது ஆரம்ப கல்வியை தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பாடசாலையில் கற்றார். 1970 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த அன்னார், கொழும்பு பல்கலைக்கழத்தில் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்  சேவை […]

நலப் பயனாளிகளுக்கு அறிவிப்பு

நலப் பலன்கள் சட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என சமூக நலப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது. 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் 100 வீதமான தெரிவுக்குழு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டார். பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என பி. விஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

மதீஷ பதிரணவுக்கு வாய்ப்பு

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பதிரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் […]

சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இனியும் அநீதி இடம்பெறக் கூடாது : கல்வி இராஜாங்க அமைச்சர்

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பெற்றிடங்களை நிரப்பும் போது தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை அங்கிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அதிருப்திகளில் இருந்து உறுதியாகியுள்ளது. ஆகவே இனி வரும் காலங்களில் இவ்வாறு பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் செயற்றிட்டத்தில் மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் தமிழ் மொழி மூலமா மான அதிகாரிகளை உள்வாங்கி அவர்களது ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் […]

நாளை முதல் பொசன் வாரம்…

நாளை (31) முதல் பொசன் வாரம் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, மிஹிந்தலை. தந்திரிமலை உள்ளிட்ட இடங்களை மையப்படுத்தி எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார். பொசன் வாரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் இறைச்சிக் கடைகளை மூடுமாறு உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தப் பகுதிகளுக்கு மதுபானம் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் மக்களைக் கோருவதாகவும் தெரிவித்தார்.

தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்?

தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கான விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய வரைவை உருவாக்குவதற்கு தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே […]

மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இதன்படி, குறைந்தது 75 மாணவர்களாவது பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெற்றிருந்தால், அந்தப் பாடசாலையை பரீட்சை நிலையமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பரீட்சை […]

ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும்(Photos)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு […]

காங்கிரஸ் பலமாகவே உள்ளது – ஜீவன்

அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் வகிபாகமே சிறந்த சான்று என CWC  பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பிரதேச செயலகங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் […]